பொருளாதாரம்
செஹான் சேமசிங்க வருமானம் தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகின்றார்
(புதிய NPP அரசாங்கத்திற்கு) அரச வருமானத்தை (மொத்த உள்நாட்டு உற்பத்தியில்) 13.1 சதவீதமாக அதிகரிப்பது சவாலாக இருக்கவில்லை.
Iroma TV | அக்டோபர் 21, 2024
Posted on: 16 ஜனவரி, 2025

True
பணம் அச்சிடப்படுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தவறாகக் குறிப்பிடுகின்றார்
முந்தைய கோட்டாபய ராஜபக்ஷ நிர்வாகம் செய்த அதே விடயங்களையே இந்த (NPP - தேசிய மக்கள் சக்தி) அரசாங்கமும் முன்னெடுக்கின்றது. […] இந்தச் சமயத்தில், நாணயங்களை அச்சிடுவதற்கு மத்திய வங்கி தவணை ஏலங்கள் மற்றும் ஓரிரவு ஏலங்களைப் பயன்படுத்துகின்றது.
ஸ்ரீலங்கா மிரர் | அக்டோபர் 28, 2024
Posted on: 10 ஜனவரி, 2025

False
எரிபொருள் தொடர்பில் தவறான கணக்கீட்டைப் பயன்படுத்துவதால் ரணவக்க தவறான கருத்தை வெளியிடுகின்றார்
(அவர்கள்) எரிபொருள் விலையைக் குறைப்பார்கள், வரிகளை நீக்குவார்கள் அல்லது குறைப்பார்கள் என்ற கூற்றை தேர்தல் மேடைகளில் கேட்டோம். […] உண்மையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒக்டேன் 92 பெற்றோல் நாட்டிற்கு ரூ.195க்கு கொண்டுவரப்பட்டது. அதேபோன்று, டீசல் சுமார் ரூ.200க்கு கொண்டுவரப்பட்டது.
டெய்லி மிரர் ஒன்லைன் | அக்டோபர் 2, 2024
Posted on: 7 நவம்பர், 2024

False
பற்றாக்குறையை பணவனுப்பல்கள் எவ்வாறு சரிசெய்கின்றன என அநுர குமார திசாநாயக்க சரியாகக் குறிப்பிடுகின்றார்
இன்றும் கூட நீங்கள் (வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள்) அனுப்பும் வெளிநாட்டு நாணயத்தால் தான் எங்கள் நாடு இயங்கிக் கொண்டிருக்கின்றது. […]
அநுரவின் யூடியூப் பக்கம் | ஜூலை 21, 2024
Posted on: 27 ஆகஸ்ட், 2024

True
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் தவறாகக் குறிப்பிடுகிறார்
|
Posted on: 29 ஜூலை, 2024

Blatantly False
பாராளுமன்ற உறுப்பினர் விதானகே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நட்டம் தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகிறார்
2023 நிதியாண்டின் இறுதியில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நட்டம் ரூ.609 பில்லியன் […] இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பமும் […] ரூ.107,000 ஐச் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற யூடியூப் சேனல் | மே 8, 2024
Posted on: 13 ஜூன், 2024

True
வேலையின்மை புள்ளிவிபரங்களை ஜனாதிபதி ஆலோசகர் தவறாகக் குறிப்பிடுகிறார்
2020 ஆம் ஆண்டில் நாட்டின் வேலையின்மை விகிதம் 5.5 சதவீதமாக அதிகரித்தது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை எதிர்கொண்ட மிக உயர்ந்த வேலையின்மை விகிதம் இதுவாகும். 2023 ஆம் ஆண்டில் இந்தப் பெறுமதியை 4.7 சதவீதமாகக் குறைப்பதற்கு அரசாங்கத்தால் முடிந்துள்ளது.
லங்காதீப | மே 8, 2024
Posted on: 1 ஜூன், 2024

Partly True
ஜனாதிபதிக்குரிய செலவின ஒதுக்கீட்டைப் பாராளுமன்ற உறுப்பினர் அதிகரித்துக் குறிப்பிடுகிறார்
இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும்… செலவினங்களைக் குறைப்பதாக அரசாங்கம் மீண்டும் உறுதியளித்தாலும் ஜனாதிபதிக்குரிய செலவினத் தலைப்பு ரூ.3,779 மில்லியனாக (அதிகரிக்கப்பட்டுள்ளது) உள்ளது… அமைச்சரவைக்கும் ஏனையவற்றுக்கும் இந்த ஜனாதிபதி செலவிடும் தொகையை நாங்கள் கவனத்தில் கொண்டால்… (தொடர்ச்சி)
பாராளுமன்றம் | நவம்பர் 22, 2023
Posted on: 4 ஏப்ரல், 2024

Partly True
நடைமுறைக் கணக்கு மிகை தொடர்பில் ஜனாதிபதி விக்கிரமசிங்க சரியாகக் குறிப்பிடுகிறார்
“2022 ஆம் ஆண்டின் இறுதியில் சென்மதி நிலுவையின் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 1.9 சதவீதமாக இருந்தது. 2023 ஆம் ஆண்டின் இறுதியில் சென்மதி நிலுவையின் நடைமுறைக் கணக்கில் நாங்கள் மிகையைப் பதிவுசெய்துள்ளோம். (தொடர்ச்சி)
பாராளுமன்றம் | பிப்ரவரி 7, 2024
Posted on: 28 மார்ச், 2024

True
வெளிநாட்டுச் செலாவணி நெருக்கடிக்கான முக்கிய காரணத்தை இராஜாங்க அமைச்சர் சேமசிங்க தவறாகக் குறிப்பிடுகிறார்
2022 ஆம் ஆண்டில், இந்த நாடு எப்போதும் சந்தித்திராத மோசமான வெளிநாட்டுச் செலாவணி நெருக்கடியைச் சந்தித்தபோது, அதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக வெளிநாட்டு தொழிலாளர்களிடம் இருந்து கிடைக்கக்கூடிய பணவனுப்பல்கள் காணப்பட்டன. அதற்கு அடுத்ததாக சுற்றுலா மூலம் கிடைக்கும் வருமானம் காணப்பட்டது.
பாராளுமன்றம் | நவம்பர் 21, 2023
Posted on: 21 மார்ச், 2024

Partly True
ஒதுக்குகள் தொடர்பில் மத்திய வங்கி உதவி ஆளுநர் கருத்து வெளியிட்டுள்ளார்
“[…] கடந்த ஆண்டின் இறுதியில் ஒதுக்குகளை 4.4 பில்லியனாக எங்களால் அதிகரிக்க முடிந்தது.”
இலங்கை மத்திய வங்கியின் 2024 இன் 01 ஆம் இலக்க நாணயக் கொள்கை மீளாய்வு | ஜனவரி 23, 2024
Posted on: 29 பிப்ரவரி, 2024

Partly True
பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவுத்திட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விக்ரமரத்ன சரியாகக் குறிப்பிடுகிறார்
பாதுகாப்பு அமைச்சைக் கருத்தில் கொள்ளும்போது, 2022 ஆம் ஆண்டுக்கான மொத்த வரவுசெலவுத் திட்டத்தில் 7 சதவீதத்தை நாங்கள் அதற்காக (பாதுகாப்பு அமைச்சு) செலவழித்திருக்கிறோம்… அதில் 60 சதவீதமானது சம்பளங்களுக்காகச் சென்றுள்ளது… (தொடர்ச்சி)
பாராளுமன்ற யூடியூப் பக்கம் | நவம்பர் 14, 2023
Posted on: 26 ஜனவரி, 2024

True
பாராளுமன்ற உறுப்பினர் அலவத்துவல உணவுச் செலவினம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கிறார்
2019 இல் கொழும்பு அல்லது இலங்கையின் வேறு எந்தப் பகுதியிலும் வாழும் தனிநபர் ஒருவரின் உணவுக்கான செலவு ரூ.6,000 முதல் ரூ.6,500க்குள் காணப்பட்டது. இது 2023 ஆம் ஆண்டில் ரூ.16,000 முதல் ரூ.17,000 ஆக அதிகரித்துள்ளது. அதாவது செலவினம் மும்மடங்காக அதிகரித்துள்ளது.
நியூஸ் பெர்ஸ்ட் | நவம்பர் 7, 2023
Posted on: 18 ஜனவரி, 2024

Partly True
வருமானம் குறைவடைந்தது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தவறாகக் குறிப்பிடுகிறார்
வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்திரப்படுத்தல் பாதையை அரசாங்கம் எடுத்திருந்தாலும், அதன் இலக்குகளில் குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சி காணப்படுகிறது. உதாரணமாக, கலால் வருமானத்தில் சுமார் 43% பற்றாக்குறை காணப்படுகிறது. (தொடர்ச்சி)
சன்டே ஒப்சேவர் | நவம்பர் 5, 2023
Posted on: 12 ஜனவரி, 2024

Partly True
பணம் அச்சிடப்படுவது தடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவிக்கிறார்
அதில் நாங்கள் தலையிடாமல் மத்திய வங்கியை (பொறுப்பு) வைத்தோம். சட்டத்தின் பிரகாரம் இனி எங்களால் பணத்தை அச்சடிக்க முடியாது. இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியிடமிருந்து (கடன்களைப் பெற) கடன் வாங்கும் திறனை நாங்கள் இழந்துவிட்டோம். (தொடர்ச்சி)
ரூபவாஹினி செய்திகள் | அக்டோபர் 21, 2023
Posted on: 9 நவம்பர், 2023

True
வரி இலக்குகள் தொடர்பில் பா.உ கொடஹேவா தவறாகக் குறிப்பிடுகிறார்
[…] 2023 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் வரி வருமானம் ரூ.3,130 பில்லியன் ஆகும் (2022 ஆம் ஆண்டிலிருந்து 70% அதிகரிப்பு). இது நடைமுறையில் சாத்தியமற்றது. வரி தளம் சரியாகச் செயற்படாததால், 2022 ஆம் ஆண்டில் வரி செலுத்தியவர்களே இந்த வரிச்சுமையைத் தாங்க வேண்டியேற்படும்.
அருண | அக்டோபர் 9, 2023
Posted on: 26 அக்டோபர், 2023

False
தொழில்துறை தொடர்பில் சரியாகக் குறிப்பிடும் பா.உ பெரேரா ஏற்றுமதிகள் தொடர்பில் தவறாகக் குறிப்பிடுகிறார்
…ஏற்றுமதிகள் 19.5 சதவீதத்தால் குறைந்துள்ளன. […] 2023 முதல் காலாண்டில் தொழில்துறை 23.4 சதவீதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பாராளுமன்ற யூடியூப் பக்கம் | ஆகஸ்ட் 23, 2023
Posted on: 20 அக்டோபர், 2023

Partly True
பணவனுப்பல்கள் குறைவடைந்தமை தொடர்பில் பா.உ விக்கிரமரத்ன சரியாகக் குறிப்பிடுகிறார், ஆனால் சமீபத்திய தகவல்களைக் குறிப்பிடவில்லை
நாங்கள் பணவனுப்பல்களைப் பார்த்தோமானால் அதிக பெறுமதியிலான பணவனுப்பல்கள் 2016, 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆகவே, 2020 மற்றும் அதற்குப் பின்னர் கிடைக்கப்பெற்ற பணவனுப்பல்கள் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளன. பணவனுப்பல்கள் சுமார் ஐ.அ.டொ 7.2 பில்லியனாக உச்சத்தில் இருந்தது. [..] (தொ))
ஐக்கிய மக்கள் சக்தி ஊடக சந்திப்பு | செப்டம்பர் 28, 2023
Posted on: 12 அக்டோபர், 2023

Partly True
கசினோ வரிகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிடிய தவறாகக் குறிப்பிடுகிறார்
[…] ஏப்ரல் 1, 2023 முதல் அமுலுக்கு வரும்வகையில் சூதாட்டம் போன்ற வணிக நிலையத்திற்குள் நுழையும் ஒவ்வொரு இலங்கையர்களுக்கும் ஐ.அ.டொ 50 கட்டணத்தை விதிக்க நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். இந்தச் சட்டம் 2015 ஆம் ஆண்டு முதல் உள்ளது. (தொடர்ச்சி…)
Manthiri.lk Watch | ஆகஸ்ட் 9, 2023
Posted on: 5 அக்டோபர், 2023

Partly True
EPF உண்மையான வருமானங்கள் தொடர்பில் பா.உ ஹர்ஷ த சில்வா சரியாகக் குறிப்பிடுகிறார்
[…] (EPF) சட்டத்தில் 2.5% வருமானம் குறிப்பிடப்பட்டுள்ளது. […] அந்த நேரத்தில் பணவீக்கம் சுமார் 1 சதவீதமாக இருந்தது. 1958 ஆம் ஆண்டுக்கு முந்தைய 5 ஆண்டுகளை நீங்கள் பார்த்தால், பணவீக்கம் சராசரி 1 சதவீதமாக இருந்தது. […] (தொடர்...)
நியூஸ்லைன் | மே 22, 2023
Posted on: 29 செப்டம்பர், 2023

True
ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் மத்திய வங்கியின் பாரபட்ச செயல்பாடு குறித்து பா.உ கம்மன்பில குறிப்பிடுகிறார்
பொது மக்களுக்கான ஊழியர் சேமலாப நிதியத்துடன் மேலதிகமாக இலங்கை மத்திய வங்கி அதன் ஊழியர்களுக்கு தனியான சேமலாப நிதியம் ஒன்றையும் பராமரிக்கிறது […]
உதய கம்மன்பிலவின் உத்தியோகபூர்வ ஃபேஸ்புக் பக்கம் | ஜூலை 4, 2023
Posted on: 17 ஆகஸ்ட், 2023

True
பா.உ கம்மன்பில: உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்க IMF நிபந்தனை விதிக்கவில்லை, ஆனால் வெளிக்கடன் வழங்குனர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்
உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) நிபந்தனை விதிக்கவில்லை. …அவ்வாறு இருக்கும் நிலையில், அதனைச் செய்யுமாறு எங்களை மிரட்டியது யார்?
மிரர் நியூஸ் யூடியூப் பக்கம் | ஜூன் 27, 2023
Posted on: 27 ஜூலை, 2023

True
சீன சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து அமைச்சர் பெர்னாண்டோவின் எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது
ஒவ்வொரு சீன சுற்றுலாப் பயணியும் 5,000 ஐ.அ.டொலரைச் செலவு செய்தால் அண்மையில் பெறப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவித்தொகைக்கு சமமான தொகையைப் பெற முடியும்… உண்மையில் இலங்கையை இந்த நெருக்கடியில் இருந்து சுற்றுலாத் துறையால் மீட்டெடுக்க முடியும்.
themorning.lk | மே 23, 2023
Posted on: 13 ஜூலை, 2023

Partly True
பணவீக்கம் குறைந்துள்ளதை விலைகள் குறைந்துள்ளதாக ஜனாதிபதி விக்ரமசிங்க தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்
“70 சதவீதமாக உயர்ந்திருந்த பணவீக்கம் தற்போது 25.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதனால் வாழ்க்கைச் சுமை படிப்படியாகக் குறைந்து வருகிறது.”
ஜனாதிபதி அலுவலகம் | ஜூன் 1, 2023
Posted on: 13 ஜூலை, 2023

Partly True
நிதியியல் உறுதிப்பாடு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிடிய பகுதியளவு சரியாகக் குறிப்பிடுகிறார்
...நாங்கள் நிதியியல் உறுதிப்பாட்டை நோக்கி படிப்படியாக முன்னேறி வருகிறோம். முதல் காலாண்டில் எங்கள் ஆரம்ப மீதி ரூ.56 பில்லியன் எதிர்மறையாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) கணக்கிட்டிருந்தது. ஆனால் இந்தக் காலாண்டில் எங்கள் ஆரம்ப மீதியை ரூ.48 பில்லியன் நேர்மறையாகக் கொண்டுவந்திருக்கிறோம்.
இலங்கை பாராளுமன்றம் - பாராளுமன்றம் நேரலை - தேவைக்கேற்ப | மே 25, 2023
Posted on: 20 ஜூன், 2023

Partly True
நிதி முகாமைத்துவச் சட்டங்களுடன் இணங்காமை குறித்து அமைச்சர் குணவர்தன சரியாகக் குறிப்பிடுகிறார்
… 2003ம் ஆண்டின் 3 ஆம் இல. அரசிறை முகாமைத்துவ பொறுப்பு சட்டத்தில்… மூன்று முக்கிய இலக்குகள் உள்ளன… வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையை 5 சதவீதத்திற்கும் குறைவாகப் பேணுதல்… 10 ஆண்டுகளில் அதாவது 2013ம் ஆண்டில் மொ.உ.உற்பத்தியின் 65 சதவீதமாக பொதுப் படுகடனைக் குறைத்தல்…
அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ யூடியூப் பக்கம் | மே 9, 2023
Posted on: 9 ஜூன், 2023

True
அரச கடன்கள் மற்றும் EPF, ETF தொடர்பில் ஹர்ஷ த சில்வா சரியாகக் குறிப்பிடுகிறார்
“இலங்கையின் உள்நாட்டுப் படுகடன்களில் பெரும்பான்மையானவை திறைசேரி முறிகளில் உள்ளன. எங்களிடம் (சுமார் 9,000 பில்லியன்) பெறுமதியான திறைசேரி முறிகள் உள்ளன… அவற்றில் 44.5% வங்கிகளில் உள்ளன… 43% ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) ஆகியவற்றிடம் இருந்து கடனாகப் பெறப்பட்டுள்ளன…”
டெய்லி FT | ஏப்ரல் 20, 2023
Posted on: 25 மே, 2023

True
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கூற்றில் தெளிவில்லை
பற்றாக்குறைக்கு நிதியளிக்கும் திட்டம்: 2023-27 காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் கடன் சேவைக் குறைப்பு, வெளிநாட்டு நிதியளிப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்யப் போதுமானதாக இருக்க வேண்டும். ஊழியர் மட்டக் கணிப்பீட்டின் கீழ், 2022 ல் நிலுவைகள் உட்பட ஐ.அ.டொ 17 பில் கடன் சேவைக் குறைப்பு தேவைப்படுகிறது.
பாராளுமன்ற ஹன்சாட் | ஏப்ரல் 26, 2023
Posted on: 18 மே, 2023

True
பணவனுப்பல்களின் அதிகரிப்பு குறித்து அமைச்சர் நாணாயக்கார சரியாகக் குறிப்பிடுகிறார்
இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் மார்ச் 2022ல் ஐ.அ.டொ 318.4 மில்லியனில் இருந்து மார்ச் 2023ல் ஐ.அ.டொ 568.3 மில்லியனாக உயர்ந்துள்ளது. மார்ச் 2022ல் பதிவான உட்பாய்ச்சல்களுடன் ஒப்பிடுகையில் இது 78.5% (ஐ.அ.டொ 249.9 மில்லியன்) அதிகரிப்பாகும்.
மனுஷ நாணாயக்காரவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கம் | ஏப்ரல் 6, 2023
Posted on: 11 மே, 2023

True
சர்வதேச நாணய நிதியம் மீது தவறான குற்றச்சாட்டை பாராளுமன்ற உறுப்பினர் வீரவங்ச முன்வைக்கிறார்
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் ஏறத்தாழ 10 சதவீதத்தால் குறைந்துள்ளது. இது பாரிய வீழ்ச்சி ஆகும். எனவே அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள ‘பொருளாதாரம்’ என்னும் நோயாளியை குறைந்தபட்சம் சாதாரண வார்டுக்குக் கொண்டுவருவதற்கான தீர்வைக் கூட, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)...
Official Facebook Page of Wimal Weerawansa | ஏப்ரல் 3, 2023
Posted on: 4 மே, 2023

False
பணம் அச்சிடுவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் சரியாகக் குறிப்பிடுகிறார்
2021ம் ஆண்டில் அச்சிடப்பட்ட மொத்த தளப் பணம் ரூ.344 பில்லியன் ஆகும். அதேவேளை 2022ல் விநியோகிக்கப்பட்ட தேறிய அடிப்படை ஒதுக்கு பணம் ரூ.40 பில்லியனுக்கும் குறைவாகும்.
டெய்லி FT | பிப்ரவரி 11, 2023
Posted on: 27 ஏப்ரல், 2023

True
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதில் இலங்கையின் செயல்திறனைக் குறிப்பிடுவதில் அமைச்சர் தவறிழைக்கிறார்
முந்தைய சந்தர்ப்பங்களில், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்து நிதியத்திடம் இருந்து உதவியைப் பெற்றுள்ளோம்… ஆனால் இந்தத் தடவை உதவியைப் பெறுவதற்கு முன்னதாக நாங்கள் அவர்களின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது. அந்த உதவியை (IMF உதவி) இலங்கை மட்டுமே 7 மாதங்களி
பாராளுமன்ற யூடியூப் சேனல் | மார்ச் 21, 2023
Posted on: 20 ஏப்ரல், 2023

Blatantly False
வரி செலுத்தும் தொழிற்படை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிடிய கூறுவது தவறாகும்
”மாதம் ஒன்றுக்கு ரூ.100,000 மேல் சம்பாதிக்கும் 120,965 நபர்கள் அல்லது தொழிற்படையின் 2.6% மட்டுமே உழைக்கும்போதே செலுத்தும் வரியை (PAYE) செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.”
டெய்லி மிரர் | பிப்ரவரி 11, 2023
Posted on: 16 மார்ச், 2023

False
பதிவுசெய்யப்பட்ட வரிக் கோப்புகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி குறித்து ஜனாதிபதி சரியாகக் குறிப்பிடுகிறார்
2019ம் ஆண்டில் மொத்தமாக 1.5 மில்லியன் வருமான வரிக் கோப்புகள் காணப்பட்டன... அதாவது மொத்தமாக எங்களிடம் 1.6 மில்லியன் வரிக் கோப்புகள் காணப்பட்டன. நாங்கள் உழைக்கும்போதே செலுத்தும் வரியை (PAYE) இல்லாதொழித்தபோது டிசம்பர் 2021ல் எங்களிடம் 400,000 வருமான வரிக் கோப்புகள் (மட்டுமே) காணப்பட்டன.
President’s Media Division | ஜனவரி 28, 2023
Posted on: 9 மார்ச், 2023

True
மொத்தப் பொருளாதார நடவடிக்கையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை தனிநபர் பங்களிப்பிலுள்ள ஏற்றத்தாழ்வாக அநுர குமார திசாநாயக்க தவறாகக் குறிப்பிடுகிறார்
இன்று எமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 36% மேல் மாகாணத்தில் இருந்து கிடைக்கிறது. நாட்டின் தேசிய செல்வத்தில் வட மத்திய மாகாணத்தின் பங்களிப்பு 5% ஆகும். வட மேல் மாகாணத்தின் பங்களிப்பு 9% ஆகும். பொருளாதாரத்தில் மக்களின் பங்களிப்பைப் பொறுத்து அதன் நன்மைகள் மக்களுக்குக் கிடைக்கும்..
அருண | ஜனவரி 26, 2023
Posted on: 2 மார்ச், 2023

Partly True
இறக்குமதி தட்டுப்பாடு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிடிய தவறாகக் குறிப்பிடுகிறார்
”...இந்த நடவடிக்கையை எடுத்ததால் தான் (குறிப்பிட்ட பொருட்கள் மீதான இறக்குமதி தடை) அத்தியாவசியப் பொருட்களான எரிபொருள், மருந்து, உரம் ஆகியவற்றை எந்தவித தட்டுப்பாடும் இன்றி இறக்குமதி செய்துகொள்ள முடிகிறது….”
நியூஸ்வயர் | ஜனவரி 26, 2023
Posted on: 23 பிப்ரவரி, 2023

False
நேரடி வரிகள் குறைவாக வசூலிக்கப்படுவது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்துகிறார்
பிற நாடுகளில் அநேகமான வரிகள் கூடுதல் வருமான வரம்பிலிருந்தே சேகரிக்கப்படுகின்றன. 2021ம் ஆண்டில் இந்தியாவில் 50% நேரடி வரி.. பங்களாதேஷில் 32% நேரடி வரி.. நேபாளத்தில் 31%.. 69%.. இந்தோனேசியாவில் 40% நேரடி வரி... வியட்னாமில் 31%, தாய்லாந்தில் 37% நேரடி வரி.. மலேசியாவில் 66% நேரடி வரி..
ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை | பிப்ரவரி 8, 2023
Posted on: 17 பிப்ரவரி, 2023

True
பாட்டலி – இலங்கையின் சௌகரியமற்ற சமநிலையைச் சரியாகக் குறிப்பிடுகிறார், எனினும் எரிபொருள் கட்டணச் சேமிப்பைத் தவறாகக் குறிப்பிடுகிறார்
”...நாட்டின் தற்போதைய நிலை குறைந்த அளவிலான சமநிலையில் உள்ளது. இது ஒரு சௌகரியமற்ற சமநிலை… எங்களின் சாதாரண (மாதாந்த) எரிபொருள் கட்டணம் ஐ.அ.டொ 550 மில்லியனாக இருந்தது. இது தற்போது ஐ.அ.டொ 200 மில்லியனாகக் குறைந்துள்ளது…”
Daily Mirror | ஜனவரி 12, 2023
Posted on: 13 பிப்ரவரி, 2023

Partly True
உள்ளுராட்சி தேர்தல்களை நடத்துவதற்கான நிதி தொடர்பான சவால்களை சியம்பலாபிடிய மிகைப்படுத்துகிறார்
2022ம் ஆண்டில் அரசாங்கத்தின் வருமானம் மற்றும் செலவினத்திற்கு இடையிலான வித்தியாசம் 256% அல்லது ரூ.3,058 பில்லியன் எனும் அதிகூடிய அளவில் காணப்பட்டது. (2023ல்) அரசாங்கம் ரூ.3.45 ட்ரில்லியன் வருமானத்தை எதிர்பார்க்கிறது. அதேவேளை செலவினம் ரூ.10 ட்ரில்லியனாக அதிகரிக்கவுள்ளது.
டெய்லி FT | ஜனவரி 21, 2023
Posted on: 2 பிப்ரவரி, 2023

False
வருமான மதிப்பீடு தொடர்பில் பா.உ அபேசிங்ஹ தவறாகக் குறிப்பிடுகிறார்
…இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள (2023) வரவு செலவுத்திட்டத்தில் இலங்கை வரலாற்றிலேயே அதிகூடிய வருமானம் மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டுக்கான வருமானத்தில் 70% அதிகரிப்பு காணப்படுகிறது. இலங்கையில் வருமானம் எப்போதும் 10%, 15% அல்லது 20 சதவீதத்தை விட அதிகரித்ததில்லை…
பாராளுமன்ற ஹன்சாட் | நவம்பர் 21, 2022
Posted on: 20 ஜனவரி, 2023

False
வரி சேகரிப்பு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிடிய தவறாகக் குறிப்பிடுகிறார்
2022ம் ஆண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஊடாக ரூ.915 பில்லியனை வரியாகச் சேகரிக்க நாங்கள் இலக்கு வைத்திருந்தோம். இந்த ஆண்டு எதிர்வுகூறப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.2% வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும், செப்டெம்பர் இறுதியில் வருடாந்த இலக்கின் 68.4 சதவீதத்தை நாங்கள் எட்டியுள்ளோம் என்பதை...
டெய்லி மிரர் | நவம்பர் 4, 2022
Posted on: 8 டிசம்பர், 2022

Partly True
அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் நட்டம் தொடர்பில் பா.உ விக்ரமரத்ன ஒரளவு சரியாகக் குறிப்பிடுகிறார்
அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் (SOEs) ஏறத்தாழ 430 உள்ளன. இவற்றில்… 218 நிறுவனங்கள் ஆகும்… இவற்றில் 52 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. 2021ம் ஆண்டில் இந்த முக்கிய நிறுவனங்களின் நட்டம் ரூ.286 பில்லியன் ஆகும்.
ஐக்கிய மக்கள் சக்தியின் உத்தியோகபூர்வ ஃபேஸ்புக் பக்கம் | அக்டோபர் 12, 2022
Posted on: 11 நவம்பர், 2022

Partly True
ஜனாதிபதி விக்கிரமசிங்க அரசாங்கத்தின் காணி உரிமை தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகிறார்
“ஏறக்குறைய 80 சதவீதமான காணிகளுக்கு அரசாங்கம் உரிமையாளர் என்ற வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தேவையான வசதிகளுடன் காணிகளை ஒதுக்கீடு செய்வதற்கு நடவடிக்ககை எடுக்கப்படும்.”
இடைக்கால வரவு செலவுத்திட்ட உரை (2022), | ஆகஸ்ட் 30, 2022
Posted on: 27 அக்டோபர், 2022

True
மதுபானம் மற்றும் புகையிலை வரிகள் தொடர்பில் பா.உ சியம்பலாபிடிய சரியாகக் குறிப்பிடுகிறார்
2021ம் ஆண்டில் மொத்த வரி வருமானத்தில் 19% புகையிலை மற்றும் மதுபானம் மூலம் பெறப்பட்டுள்ளது.
டெய்லி நியூஸ் | செப்டம்பர் 21, 2022
Posted on: 20 அக்டோபர், 2022

True
அறிக்கையில் தவறாகத் தலைப்பிடப்பட்டுள்ளதால் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த தவறாகக் குறிப்பிடுகிறார்
2021ம் ஆண்டில் 507,000 வருமான வரிக் கோப்புகள் காணப்பட்டன. இவற்றில் 292,000 தனிநபர்களினதும் 68,000 நிறுவனங்களினதும் ஆகும்.
பாராளுமன்ற நேரலை யூடியூப் சேனல் | செப்டம்பர் 8, 2022
Posted on: 13 அக்டோபர், 2022

Partly True
வரி வருமானம் தொடர்பில் அமைச்சர் குணவர்தன குறிப்பிடுகிறார்
கடந்த ஆண்டு (2021) அரசாங்கத்தால் சேகரிக்கப்பட்ட மொத்த வரி வருமானம் ரூ.1,298 பில்லியன். இந்தத் தொகையில் ரூ.1,115 பில்லியன் அரச உத்தியோகத்தர்களுக்குச் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செலுத்துவதற்காக மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே ரூ.153 பில்லியன் மட்டுமே வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்காக மீதமிருந
அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஃபேஸ்புக் பக்கம் | ஆகஸ்ட் 23, 2022
Posted on: 6 அக்டோபர், 2022

Partly True
ஏற்றுமதி குறைந்துள்ளது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் சரியாகக் குறிப்பிடுகிறார்
2001ல் மொத்தத் தேசிய உற்பத்தியில் ஏற்றுமதி மூலமான வருமானம் 33 சதவீதமாகக் காணப்பட்டது. தற்போது இது 15 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
அணுகுவதற்கு | செப்டம்பர் 13, 2022
Posted on: 30 செப்டம்பர், 2022

True
சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கு கடினமானது என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ த சில்வா குறிப்பிடுகிறார்
2025ம் ஆண்டுக்குள் ஆரம்ப கணக்கு மீதியை மொ.உ.உற்பத்தியின் 2.3 சதவீதமாக எட்டுவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணங்கியுள்ளது. எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தின்போது இது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சுமார் (-6%) வீழ்ச்சியடைந்தது.
டெய்லி FT | செப்டம்பர் 5, 2022
Posted on: 22 செப்டம்பர், 2022

True
அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் வாங்கிய கடன் தொகை குறித்து ஹசீம் சரியாகத் தெரிவிக்கிறார்
2021 டிசம்பரில் அரச நிறுவனங்களால் ஒரு ட்ரில்லியனுக்கும் அதிகமான தொகை கடனாகப் பெறப்பட்டுள்ளது.
திவயின | ஆகஸ்ட் 18, 2022
Posted on: 15 செப்டம்பர், 2022

True
அமைச்சர் குணவர்தன புகையிரத சேவைகள் குறித்து சரியாகத் தெரிவிக்கிறார்
2021ம் ஆண்டில் இலங்கை புகையிரத சேவைகள் ரூ.2.6 பில்லியனை வருமானமாக ஈட்டியிருந்தாலும் சம்பளங்கள் மற்றும் வேதனங்களுக்காக மட்டும் ரூ.7.8 பில்லியனைச் செலுத்த வேண்டியிருந்தது.
மவ்பிம | ஜூலை 27, 2022
Posted on: 8 செப்டம்பர், 2022

True
ஜனாதிபதி விக்கிரமசிங்க: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் நட்டம் தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகிறார்
2020-2021ம் ஆண்டில் மட்டும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் நட்டம் ரூ.45 பில்லியன். மார்ச் 31, 2021 நிலவரப்படி மொத்த நட்டம் ரூ.372 பில்லியன்
லங்காதீப | மே 17, 2022
Posted on: 2 செப்டம்பர், 2022

True
பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன பணவீக்கத்தைச் சற்று மிகைப்படுத்திக் குறிப்பிடுகிறார்
கடந்த மாதத்தில் 46.6 சதவீதமாகக் காணப்பட்ட உணவுப் பணவீக்கம் இந்த மாதம் 57 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒரு மாத காலத்திற்குள் பணவீக்கம் – உணவுப் பணவீக்கம் – 10 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. எங்களின் ஆண்டுக்காண்டு பணவீக்கம் கூட வழக்கமாக 10 சதவீதத்தால் அதிகரிப்பதில்லை.
லங்காதீப | ஆகஸ்ட் 6, 2022
Posted on: 25 ஆகஸ்ட், 2022

Partly True
அரசாங்கத்தின் செலவினத்தை ஜனாதிபதி விக்கிரமசிங்க குறைத்துக் குறிப்பிடுகிறார்
முன்னாள் அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தில் வருமானம் ரூ.2.3 ட்ரில்லியன் என எதிர்வுகூறப்பட்டிருந்தாலும் இந்த ஆண்டுக்கான உண்மையான வருமானம் ரூ.1.6 ட்ரில்லியன் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் செலவினம் ரூ.3.3 ட்ரில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
டெய்லி மிரர் | மே 17, 2022
Posted on: 10 ஆகஸ்ட், 2022

False
கடந்த காலங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்த்தன சரியாகக் குறிப்பிடுகிறார்
நாடு இந்த நிலைக்கு வந்துள்ளதாக தற்போதைய அரசாங்கத்திலுள்ள சிலர் கூறுகின்றனர். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்காகவே நாங்கள் பெற்றுக்கொண்ட கடன்களில் 80% பயன்படுத்தப்பட்டுள்ளன.
டெய்லி நியூஸ் | ஏப்ரல் 27, 2022
Posted on: 28 ஜூலை, 2022

True
வங்குரோத்து நிலை குறித்த சப்ரியின் அறிக்கை தவறானது
சிலர் இலங்கை வங்குரோத்து நிலையை (Bankruptcy) அடைந்துவிட்டதாகக் கூறுகின்றனர். நாட்டின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் பெறுமதியின் அடிப்படையில் மாத்திரம் வங்குரோத்து நிலை தீர்மானிக்கப்படுவதில்லை.
டெய்லி நியூஸ் | ஏப்ரல் 9, 2022
Posted on: 7 ஜூலை, 2022

False
வரி சேகரிப்பு தொடர்பில் கடந்த கால அரசாங்கங்களை சப்ரி குறைகூறுகிறார்
இந்த அனைத்து அரசாங்கங்களின் (1981ம் ஆண்டிலிருந்து ஆட்சியில் இருந்த ஒவ்வொரு அரசாங்கத்தின்) கீழும் காலப்போக்கில் இது (மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக வரி வருமானம்) குறைந்துகொண்டே வந்து, இன்று 8.7 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஏசியன் மிரர் யூடியூப் சேனல் | மே 4, 2022
Posted on: 9 ஜூன், 2022

Partly True
கடந்த காலங்களில் பெறப்பட்ட கடன்கள் தொடர்பில் ஜனாதிபதி ராஜபக்ஷ தவறான பெறுமதிகளைக் குறிப்பிடுகிறார்
ஆட்சியிலிருந்த முந்தைய அரசாங்கங்கள் பல்வேறு காரணங்களுக்காகப் பெற்றுக்கொண்ட கடன்களை நாங்கள் ஒவ்வொரு மாதமும் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.
ஹெட்லைன்நியூஸ்.lk | பிப்ரவரி 26, 2022
Posted on: 26 மே, 2022

Partly True
தொழிலாளர் பணவனுப்பல்கள் குறித்து அநுர குமார திசாநாயக்க சரியாகக் குறிப்பிடுகிறார்
2021ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் அதிகரித்திருந்தன. அவை ஐ.அ.டொ 450 மில்லியனால் அதிகரித்தன. எனினும் ஆறாவது மாதத்திலிருந்து அவை வீழ்ச்சியடையத் தொடங்கின… இந்த ஜனவரியில் (பணவனுப்பல்கள்) 62 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளன.
லங்காதீப | மார்ச் 7, 2022
Posted on: 5 மே, 2022

True
முன்னாள் ஆளுநரின் அறிக்கையில் மூன்று தவறுகள் உள்ளன
2015 – 2019 காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி படிப்படியாக 7 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைந்தது. வெளிநாட்டுக் கடன் ஐ.அ.டொ 15 பில்லியனால் அதிகரித்திருந்தாலும் வெளிநாட்டு ஒதுக்குகள் ஐ.அ.டொ 1 பில்லியனால் குறைவடைந்தன.
நியூஸ்19.lk | மார்ச் 23, 2022
Posted on: 28 ஏப்ரல், 2022

False
இலங்கை மத்திய வங்கியின் ஆறு மாதகாலத் திட்டத்தின் வெற்றியை மதிப்பிடுவதில் முன்னாள் ஆளுநர் கப்ரால் தவறிழைத்துள்ளார்
இலங்கை மத்திய வங்கி கடந்த ஆண்டு அறிவித்த ஆறு மாதகாலத் திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட உட்பாய்ச்சல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதால் அது வெற்றிகரமானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
த மோர்னிங் | மார்ச் 3, 2022
Posted on: 7 ஏப்ரல், 2022

Blatantly False
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கைத்தொழில் துறையின் பங்கு குறித்து அமைச்சர் ஜயசேகர தவறாகக் குறிப்பிடுகிறார்
கைத்தொழில் துறை தற்போது பாரிய நெருக்கடியில் உள்ளது. 77ம் ஆண்டுக்குப் பின்னர் ஆட்சியிலிருந்த ஒவ்வொரு அரசாங்கமும் இதற்குப் பொறுப்பு… எப்போதும் 54 சதவீதமாகக் காணப்பட்ட கைத்தொழில் துறை 27 சதவீதமாகக் குறைந்துள்ளது.
அத தெரண | பிப்ரவரி 4, 2022
Posted on: 31 மார்ச், 2022

False
சுற்றுலாத்துறை தொடர்பான ஆளுநர் கப்ராலின் கருத்துகள் தவறானவை
சுற்றுலா 10 பில்லியன் டொலர் பெறுமதியான தொழில்துறை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதன் பலன்களை எங்களால் அனுபவிக்க முடியவில்லை
ப்ளூம்பெர்க் | பிப்ரவரி 18, 2022
Posted on: 16 மார்ச், 2022

False
பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகிறார்
”இப்போது ஆசியாவிலேயே நாங்கள் தான் (இலங்கை) உயர் பணவீக்கத்தைக் கொண்டிருக்கிறோம்”
அத தெரண | பிப்ரவரி 1, 2022
Posted on: 3 மார்ச், 2022

True
இலங்கையின் ஒதுக்குகள் குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் கூற்று சரியானது
2019 மற்றும் 2021ம் ஆண்டுகளை ஒப்பிடுகையில் இலங்கையில் வெளிநாட்டு ஒதுக்குகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி 80% ஆகும். ஆனால் (தெற்காசியா) பிராந்தியத்திலுள்ள பிற நாடுகளில் ஒதுக்குகளில் அதிகரிப்பு காணப்படுகிறது.
டெய்லி FT | ஜனவரி 25, 2022
Posted on: 24 பிப்ரவரி, 2022

True
சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பயணம் குறித்து அமைச்சர் அழகப்பெரும சரியாகக் குறிப்பிடுகிறார்
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF – International Monetary Fund) உறுப்புரிமையைப் பெறுவதற்காக 1950 ஆம் ஆண்டில் நாங்கள் நிதியத்துடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தினோம். உறுப்புரிமை பெற்ற நாடாக, 1960 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 16 தடவைகள் கடன்களைப் பெற்றுள்ளோம்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் | ஜனவரி 19, 2022
Posted on: 17 பிப்ரவரி, 2022

True
அமைச்சர் அளுத்கமகே கடன் அட்டைகள் மற்றும் வரிக்கோவைகள் தொடர்பில் தவறாகக் குறிப்பிடுகிறார்
எங்கள் நாட்டில் சுமார் 1,000 வரிக்கோவைகள் உள்ளன. எங்கள் நாட்டில் 10 மில்லியனுக்கும் அதிகமான கடன் அட்டைகள் உள்ளன. கடன் அட்டை உள்ள ஒவ்வொருவரும் சுமார் ரூ.1 மில்லியன் முதல் ரூ.1.5 மில்லியன் வரை பணப் பரிவர்த்தனை செய்கின்றனர்.
சன்டே ஒப்சேவர் | செப்டம்பர் 12, 2021
Posted on: 24 நவம்பர், 2021

Blatantly False
2021 ஆம் ஆண்டு வருமானத்தில் ஏற்பட்ட குறைவு தொடர்பில் நிதியமைச்சர் மிகைப்படுத்துகிறார்
விசேடமாக கோவிட் – 19 பெருந்தொற்று காரணமாக இந்த ஆண்டில் மாத்திரம் நாங்கள் பெற்றிருக்கக்கூடிய வருமானத்தில் ரூ.1,500- 1,600 பில்லியன் குறைவு ஏற்பட்டுள்ளது. நாங்கள் நிச்சயமாக ஈட்டுவோம் என மதிப்பிட்ட வருமானத்தை விடவும் இது மிக அதிகமாகும்
பாராளுமன்ற ஹன்சாட் | செப்டம்பர் 7, 2021
Posted on: 10 நவம்பர், 2021

Blatantly False
முன்னாள் இராஜாங்க அமைச்சர் கப்ரால் கோவிட் – 19 செலவினங்கள் தொடர்பாகத் தவறாகக் குறிப்பிடுகிறார்
கோவிட் – 19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தவும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் அரசாங்கம் ரூ.700 பில்லியனுக்கும் அதிகமாகச் செலவிட்டுள்ளது. இது கடந்த வருடம் நாட்டின் மொத்த வருமானத்தில் சரியாகப் பாதியளவான தொகை ரூ.1,380 பில்லியன் ஆகும்… குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பங்களுக்கான சமுர்த்தி கொடுப்பனவுகள
டெய்லி நியூஸ் | ஆகஸ்ட் 30, 2021
Posted on: 13 அக்டோபர், 2021

False
பாராளுமன்ற உறுப்பினர் அமரவீர சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்களுக்குச் செலவிடும் தொகையை அதிகரித்துக் குறிப்பிடுகிறார்
அரசாங்க வருமானத்தில் 85 சதவீதத்திற்கும் அதிகமான தொகை அரச உத்தியோகத்தர்களுக்குச் சம்பளம் மற்றும் ஓய்வூதியமாகச் செலுத்தப்படுகிறது.
அரசாங்க தகவல் திணைக்கள ஊடக சந்திப்பு | செப்டம்பர் 1, 2021
Posted on: 7 அக்டோபர், 2021

False
அமைச்சர் ரம்புக்வெல்ல உள்நாட்டு பால் உற்பத்தி தொடர்பில் சரியாகத் தெரிவிக்கிறார்
(உள்நாட்டு) பால் உற்பத்தி தற்போதும் மொத்தத் தேவையில் சுமார் 40 சதவீதமாகவே உள்ளது.
டெய்லி நியூஸ் | ஆகஸ்ட் 11, 2021
Posted on: 16 செப்டம்பர், 2021

True
சீனி வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச மதிப்பிடுகிறார்
சீனி தொடர்பான ஊழலினால் இலங்கை ரூ.20 பில்லியனை இழந்துள்ளது.
சஜித் பிரேமதாசவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் | ஆகஸ்ட் 27, 2021
Posted on: 9 செப்டம்பர், 2021

True
இலங்கையில் டீசலின் விலை குறைவு என்பதை மட்டும் அமைச்சர் பத்திரண சரியாகக் குறிப்பிடுகிறார்
தெற்காசியப் பிராந்தியத்திலுள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டில் எரிபொருளின் விலை பிராந்தியத்திலுள்ள பிற நாடுகளை விடக் குறைவாகும். இந்தப் பிராந்தியத்திலுள்ள நாடுகளில் பாகிஸ்தான் மட்டுமே இலங்கையை விடக் குறைந்த விலையில் டீசலை வழங்குகிறது. பிராந்தியத்திலுள்ள பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில்
ஹன்சார்ட் | ஜூலை 20, 2021
Posted on: 2 செப்டம்பர், 2021

Partly True
சீனா மற்றும் இலங்கையின் கடந்த கால மொ.உ.உ தரவரிசை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் நிஷாந்த தவறாகக் குறிப்பிடுகிறார்.
நாங்கள் நல்லாட்சி அரசாங்கத்திடம் நாட்டைக் கையளித்த போது உலகளவில் மிக உயர்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை சீனா கொண்டிருந்தது, இரண்டாவதாக இலங்கை காணப்பட்டது.
லங்காதீப | ஜூலை 30, 2021
Posted on: 27 ஆகஸ்ட், 2021

Blatantly False
அமைச்சர் குணவர்த்தன: வரிச் சுமை தொடர்பில் பெறுமதிகள் சரி. ஆனால் முடிவுகள் தவறு
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆட்சி முடிவுக்கு வந்த 2014 ஆம் ஆண்டு இறுதியில் வரி வருமானம் ரூ.1,050 பில்லியன். அதன் பிறகு வந்த நல்லாட்சி அரசாங்கம் ஆண்டுக்கு ரூ.1,700 பில்லியனுக்கும் அதிகமாக வசூலிப்பதற்காக வரி வீதங்களை அதிகரித்தது. இது அதிக சுமையை ஏற்படுத்தியது. நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்
டெய்லி நியூஸ் | ஜூன் 24, 2021
Posted on: 13 ஆகஸ்ட், 2021

Partly True
சுற்றுலாத்துறை மூலமான வருமானத்தின் வீழ்ச்சி தொடர்பில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர சரியாகக் குறிப்பிடுகிறார்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களினாலும் கோவிட் – 19 பெருந்தொற்றினாலும் சுற்றுலாத் துறை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையின் வீழ்ச்சியினால் ஆண்டொன்றுக்கு இலங்கைக்குக் கிடைத்திருக்க வேண்டிய வருமானம் ஐ.அ.டொலர் 5 பில்லியனை இழந்திருக்கிறோம்.
டெய்லி மிரர் ஒன்லைன் | ஜூலை 13, 2021
Posted on: 29 ஜூலை, 2021

True
இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நட்டத்திற்கான காரணத்தை உதய கம்மன்பில தவறாகக் குறிப்பிடுகிறார்.
மசகு எண்ணெய் தொடர்ச்சியாக அதிக விலையில் கொள்வனவு செய்யப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டதன் காரணமாக 2020 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் திரட்டப்பட்ட நட்டம் ரூ.331 பில்லியனாகக் காணப்பட்டது.
உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் | ஜூன் 11, 2021
Posted on: 15 ஜூலை, 2021

False
எக்ஸ்பிரஸ் பேர்ள் (X-Press Pearl) பேரிடரினால் பாதிக்கப்பட்ட கடற்றொழில் துறை குறித்து பிரேமதாச சரியாகக் குறிப்பிடுகிறார்.
இலங்கை மத்திய வங்கி 2019 அறிக்கையின் பிரகாரம், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு கடற்றொழில் துறை 1.1% பங்களிப்பை வழங்கியுள்ளது.
திவயின | ஜூன் 3, 2021
Posted on: 1 ஜூலை, 2021

True
பணம் அச்சிடுவதை அனுர குமார திசாநாயக்க மிகை மதிப்பிடுகிறார்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல் இந்த ஆண்டின் மார்ச் மாதம் வரை ரூ. 831 பில்லியன் பெறுமதியான பணம் அச்சிடப்பட்டுள்ளது.
மவ்பிம | மே 3, 2021
Posted on: 25 ஜூன், 2021

Partly True
கைத்தொழில் உற்பத்தி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சரியான அவதானிப்புக்களை வழங்குகின்றார்
இலங்கையின் தேசிய உற்பத்தி செயற்பாட்டில் கைத்தொழில்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதுடன், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 26.4% பங்களிப்பை வழங்குகின்றன. அத்துடன் சுமார் 10% என்ற மிகக்குறைந்த அளவில் மட்டுமே ஏற்றுமதிக்குப் பங்களிக்கின்றன.
டெய்லி FT | ஏப்ரல் 9, 2021
Posted on: 31 மே, 2021

True
தேசிய கணக்கு மோசடியை பா.உ ஹர்ஷ டி சில்வா வெளிப்படுத்துகின்றார்
2020 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை 11% என இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஆனால் அது 14 சதவீதத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.
ஹர்ஷ டி சில்வாவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கம் | மே 1, 2021
Posted on: 13 மே, 2021

True

Partly True
பங்கு பரிவர்த்தனையில் இருந்து வெளிநாட்டு வெளிப்பாய்ச்சல்களை பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன சரியாகக் குறிப்பிடுகின்றார்.
பங்கு பரிவர்த்தனையில் இருந்து பாரிய அளவிலான வெளிநாட்டு முதலீடு வெளியே சென்றுள்ளது. 2020 ஆம் ஆண்டில் ரூபாயின் மதிப்பில் ரூ.51 பில்லியன் வெளிப்பாய்ச்சல் பதிவாகியுள்ளது…
லங்கா பிசினஸ் ஒன்லைன் | ஜனவரி 18, 2021
Posted on: 25 பிப்ரவரி, 2021

True
இராஜாங்க அமைச்சர் கப்ரால்: ஒதுக்குகள் தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகின்றார்.
எங்களிடம் ஐ.அ.டொலர் 8.2 பில்லியன் ஒதுக்குச் சொத்துக்கள் காணப்பட்டன... நல்லாட்சி அரசாங்கம் எங்களிடம் அரசாங்கத்தை கையளித்த போது, ஒதுக்குச் சொத்துக்களில் ஐ.அ.டொலர் 7.6 பில்லியன் மாத்திரமே காணப்பட்டது.
மவ்பிம | ஜனவரி 7, 2021
Posted on: 27 ஜனவரி, 2021

True
தவறான அடிப்படையைக் கொண்டுள்ளதால் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தவறாகக் கணக்கிடுகின்றார்.
2020 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் அரசாங்கத்துக்கு கிடைக்கப்பெற்ற வரி வருமானம், கடந்த வருடத்தின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 40.9% ஆல் குறைந்துள்ளது.
திவயின | அக்டோபர் 7, 2020
Posted on: 3 டிசம்பர், 2020

False
கணக்கிடும் முறையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கணக்கில் கொள்ளத் தவறிவிட்டார்
“...2014 ஆம் ஆண்டில் எனது அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.7 சதவீதமாக குறைத்த வரவு செலவுப் பற்றாக்குறை, 2019 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.6 சதவீதமாக அதிகரித்துள்ளது...
2020 ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு | நவம்பர் 13, 2020
Posted on: 19 நவம்பர், 2020

False
ஜனாதிபதி ராஜபக்ஷ: அஞ்சல் திணைக்களத்தின் செலவினம் குறித்து சரியாகத் தெரிவிக்கின்றார்
“அஞ்சல் திணைக்களம் தற்போது சுமார் ரூ.6 பில்லியன் நட்டத்துடன் இயங்குகின்றது. இது வருடாந்தம் ரூ.8 பில்லியன் வருமானத்தை ஈட்டுகின்றது. மேலதிக கொடுப்பனவுகள், சம்பளங்கள் மற்றும் பிற செலவினங்களினால் திணைக்களத்தின் செலவினம் சுமார் ரூ.14 பில்லியனாக அதிகரித்துள்ளது.”
தினமின | செப்டம்பர் 30, 2020
Posted on: 12 நவம்பர், 2020

True
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க: சில சரியான புள்ளிவிபரங்களுடன் தவறாகக் குறிப்பிடுகின்றார்.
நான் பிரதமராக இருந்தபோது, அரசாங்கத்தின் வருமானம் ரூ.150,000 மில்லியன். கடந்த மாத வருமானம் ரூ.50,000 மில்லியன். அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கு ரூ.90,000 மில்லியன் தேவைப்படும்.
திவயின | அக்டோபர் 3, 2020
Posted on: 5 நவம்பர், 2020

False
வங்கித்துறையின் வலிமை குறித்த ஆளுநரின் கூற்றினை நம்பலாம்
வங்கித்துறையின் மொத்த மூலதனப் போதுமை விகிதம் 16 சதவீதத்திற்கும் மேல், நிகர நிலையான நிதி விகிதம் 130 சதவீதத்திற்கும் மேல், பணப்புழக்க பாதுகாப்பு விகிதம் 175 சதவீதத்திற்கும்
டெய்லி நியூஸ் | ஜூன் 8, 2020
Posted on: 30 ஜூலை, 2020

True
பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகரித்துக் குறிப்பிடுகின்றார்.
2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் பொருளாதார வளர்ச்சி வீதம் 7 மற்றும் 8 வீதத்திற்கு இடையில் காணப்பட்டது. ஆனால் 2019 ஆம் ஆண்டில் இது 2 சதவீதத்திற்கும் கீழே வீழ்ச்சியடைந்துள்ளது.
திவயின | ஜூன் 16, 2020
Posted on: 7 ஜூலை, 2020

Partly True
வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவது குறித்து தினேஷ் குணவர்த்தன சரியாக தெரிவிக்கின்றார்.
2018 ஆம் ஆண்டில் வெளிநாட்டுப் பணியாளர்கள் மூலம் இந்த நாட்டுக்கு கிடைத்த வருமானம் சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள். இது அந்த ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 7.9% ஆகும்.
திவயின | ஜூன் 9, 2020
Posted on: 18 ஜூன், 2020

True
நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் வருமான வளர்ச்சியினை பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க மிகைப்படுத்துகின்றார்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது, அரச வருமானம் 1.05 ட்ரில்லியன் ரூபாவாக காணப்பட்டது. எமது அரசாங்கம் 5 ஆண்டுகளில் இந்த வருமானத்தை 2.1 ட்ரில்லியன் ரூபாவாக இரட்டிப்பாக்கியது.
லங்காதீப | பிப்ரவரி 6, 2020
Posted on: 29 ஏப்ரல், 2020

Partly True
பிணை முறி பரிவர்த்தனைகளினால் ஏற்பட்ட இழப்பினை மீட்டெடுப்பது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் கிரியெல்ல மிகைப்படுத்துகின்றார்.
பிணை முறிகளினால் ஐக்கிய தேசியக்கட்சி 10 பில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதே குற்றச்சாட்டு. பெர்ப்பச்சுவல் ரெசரிஸின் 12 பில்லியன் ரூபா சொத்துக்களை
லங்காதீப | பிப்ரவரி 2, 2020
Posted on: 11 மார்ச், 2020

Partly True
பிணை முறி பரிவர்த்தனைகளினால் ஏற்பட்ட நட்டத்தினால் பலனடைந்தவர்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தவறாக அடையாளம் கண்டுள்ளார்.
2005 - 2015 காலப்பகுதியில் இடம்பெற்ற பிணைமுறி பரிவர்த்தனைகள் குறித்த தடயவியல் தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட 10,000 மில்லியன் ரூபா நட்டத்தில் சுமார் 96
டெய்லி நியூஸ் | ஜனவரி 30, 2020
Posted on: 4 மார்ச், 2020

False
கடந்த கால மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி தொடர்பில் அமைச்சர் ரம்புக்வெல்ல: சரியானது ஆனாலும் தவறாக வழி நடத்தும்
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பொறுப்பினை கையேற்றுக் கொண்ட போது, மொத்த உள்நாட்டு உற்பத்தி 20 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்
தினமின | டிசம்பர் 4, 2019
Posted on: 15 ஜனவரி, 2020

True
அமைச்சர் றிஸாட் பதியுதீன்: ஏற்றுமதி புள்ளிவிபரங்கள் திருப்தியாக உள்ளன.
தகவல், தொடர்பு மற்றும் தொழில்நுட்பம்/வர்த்தக செயலாக்க முகாமைத்துவம், மின்னணு, அச்சு மற்றும் பொதிசெய்யும் சேவைகள் மாத்திரம் ஒவ்வொரு ஆண்டும் ஏற்றுமதி வருமானத்தில் சுமார் 1.3 பில்லியன் டொலர்களை பங்களிப்புச் செய்கின்றன.
டெய்லி FT | ஆகஸ்ட் 28, 2019
Posted on: 9 அக்டோபர், 2019

True
இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நட்டம் தொடர்பில் ஜனாதிபதி விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு நாளைக்கு பல மில்லியன் (ரூபா) நட்டத்தை சந்திக்கின்றன.
திவயின | ஜூன் 4, 2019
Posted on: 24 ஜூலை, 2019

True
பாராளுமன்ற உறுப்பினர் ஹேரத் மொத்த வட்டிக்கொடுப்பனவுகள் குறித்து தவறாகக் குறிப்பிடுகின்றார்.
2018 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் ரூ.1920 பில்லியன், வட்டிக்கொடுப்பனவுகள் ரூ.2088 பில்லியன். இது வருமானத்தை விட ரூ.168 பில்லியன் அதிகமாகும்.
திவயின | மே 28, 2019
Posted on: 10 ஜூலை, 2019

False
சுற்றுலாத் துறையின் வருமானத்தை அமைச்சர் எரான் விக்கிரமரத்ன சரியாகத் தெரிவித்துள்ளார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத் துறையின் பங்களிப்பு 5 சதவீதமாக உள்ளது.
தினமின | மே 22, 2019
Posted on: 7 ஜூலை, 2019

True
சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க சுற்றுலா அபிவிருத்தி தொடர்பில் சரியாக குறிப்பிடுகிறார்
2015 இல் அவர் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட போது சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.5 மில்லியன், 2018 இல் இது 2.3 மில்லியனாக உயர்ந்தது.
டெய்லி நியூஸ் | மார்ச் 27, 2019
Posted on: 17 மே, 2019

True
இலங்கை ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளமை குறித்து அமைச்சர் மங்கள சமரவீர சரியாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களில், ரூபாயின் மதிப்பு 2.5 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
டெய்லி நியூஸ் | மார்ச் 13, 2019
Posted on: 11 ஏப்ரல், 2019

True
தேயிலை மற்றும் இறப்பரின் பொருளாதார பங்களிப்பினை பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ சரியாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு தேயிலை தொழில்துறை 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், இறப்பர் தொழில்துறை 0.8 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் பங்களிக்கின்றன.
மவ்பிம | பிப்ரவரி 4, 2019
Posted on: 6 மார்ச், 2019

True
சுகாதாரம் மற்றும் கல்விக்கான வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டை அமைச்சர் சாகல ரத்நாயக்க மிகைப்படுத்துகின்றார்.
கடந்த வருடம் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை மொத்த வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டின் 25 சதவீதம் ஆகும்.
மவ்பிம | பிப்ரவரி 4, 2019
Posted on: 27 பிப்ரவரி, 2019

False
அநுர குமார திஸாநாயக்க: தவறான தரவுகள் மற்றும் பிழையான கூற்றுக்களை தனது அறிக்கையில் முன்வைத்துள்ளார்.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேல் மாகாணம் 52 சதவீத பங்களிப்பையும், பிற மாகாணங்கள் 48 சதவீத பங்களிப்பையும் வழங்குவதாக இலங்கை மத்திய வங்கி வருடாந்த அறிக்கை குறிப்பிடுகின்றது. பொருளாதாரம் வளர்ச்சியடையவில்லை.
மவ்பிம | அக்டோபர் 28, 2018
Posted on: 17 அக்டோபர், 2018

Blatantly False
சிகரட் விற்பனை குறைவடைந்ததால் சிகரட் மூலம் கிடைக்கும் வரி வருமானம் ரூ.18 பில்லியனால் குறைந்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்திருந்தார். அவரின் கூற்று தவறானது என தரவுகள் நிரூபிக்கின்றன.
சிகரட் விற்பனை குறைவடைந்ததால் அரசாங்கத்திற்கு 1,800 கோடி (ரூ.18 பில்லியன்) வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.
லங்காதீப | செப்டம்பர் 12, 2018
Posted on: 4 அக்டோபர், 2018

Blatantly False