கடன்
வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பில் ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார்
எமது நாட்டின் மொத்த வெளிநாட்டுக் கடன்கள் ஐ.அ.டொ 37 பில்லியன். எனினும் இந்த நபர் (சமூக ஊடகத்தில் பதிவிட்டவர்) தவறான பெறுமதியைக் குறிப்பிடுகிறார்… (அவர்) கடந்த இரண்டாண்டுகளில் நாங்கள் (ஐ.அ.டொ 71 பில்லியனில் இருந்து) (ஐ.அ.டொ) 100 பில்லியன் வரை கடனாகப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடுகிறார். எனினும் கடன்களைத்
பாராளுமன்ற YouTube பக்கம் | ஜூலை 2, 2024
Posted on: 1 ஆகஸ்ட், 2024

Partly True
ரணில் விக்ரமசிங்கவின் நல்லாட்சி கடன் தொடர்பில் அநுர குமார திசாநாயக்க தவறாகக் குறிப்பிடுகிறார்
2015 இல் ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வரும்போது, எமது கடன் ரூ.8.5 ட்ரில்லியனாக இருந்தது […] 2020 ஆம் ஆண்டில் நாட்டின் கடன் […] ரூ.15 ட்ரில்லியன் ஆகும் […] ரணிலின் ஐந்தாண்டுகள் நாட்டின் கடனை சுமார் ரூ.6.5 ட்ரில்லியனால் அதிகரித்துள்ளன.
ஜேவிபி பேஸ்புக் பக்கம் | அக்டோபர் 22, 2023
Posted on: 7 டிசம்பர், 2023

False
ஜனாதிபதி ராஜபக்ஷ கடன்கள் தொடர்பில் தவறாகக் குறிப்பிடுகிறார்
நான் பதவியில் இருந்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாட்டுக் கடனாக ஒரு சதத்தைக் கூட பெறவில்லை.
நியூஸ்வயர் | ஜனவரி 7, 2022
Posted on: 26 ஜனவரி, 2022

False
அமைச்சர் பந்துல குணவர்தன கடனை ஒப்பிடுவதற்குத் தவறான கணக்கீட்டைப் பயன்படுத்துகிறார்
மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டைப் பொறுப்பேற்றுக்கொண்ட போது கடன் 2 டிரில்லியனாகக் காணப்பட்டது. அவர் நாட்டைக் கையளித்தபோது கடனானது 7 டிரில்லியனாக இருந்தது. (அந்த) 10 ஆண்டுகளில் கடன் 5 டிரில்லியனால் மாத்திரம் அதிகரித்திருந்தது. (ஆனால்) நாட்டை எங்களிடம் மீளக்கையளித்தபோது கடன் 13 டிரில்லியனாகக் காணப்பட்டது.
பாராளுமன்ற ஹன்சாட் | நவம்பர் 13, 2021
Posted on: 20 ஜனவரி, 2022

False
பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி.ஜே செனவிரத்ன கடன் அதிகரிப்பை மும்மடங்காகக் குறிப்பிடுகிறார்
கௌரவ. மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைக் கையளித்தபோது எங்களிடம் 72% வெளிநாட்டுக் கடன்கள் மாத்திரமே இருந்தன. எனினும் நல்லாட்சி அரசாங்கத்தின் பிறகு நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது இது 96 சதவீதமாக உயர்ந்திருந்தது. ஆகவே நல்லாட்சி அரசாங்கத்தின் ஐந்தாண்டு கால ஆட்சியில் அவர்கள் அதிக அளவிலான கடன்களைப் பெற்றுள்ளனர்
பாராளுமன்ற ஹன்சாட் | நவம்பர் 15, 2021
Posted on: 16 டிசம்பர், 2021

False
பாராளுமன்ற உறுப்பினர் விக்கிரமரத்ன இலங்கையின் வட்டிக் கொடுப்பனவு குறித்துச் சரியாகத் தெரிவிக்கிறார்
கடன் மீள்கொடுப்பனவு வட்டிக்காக அரசாங்க வருமானத்தில் 70% செலவிடப்படுகிறது. தேசிய வருமானத்தின் சதவீதமாக வட்டியைக் கணக்கிடும் போது இலங்கையை விட அதிக வட்டியைச் செலுத்தும் ஒரே நாடு லெபனான்.
டெய்லி FT | ஆகஸ்ட் 5, 2021
Posted on: 30 செப்டம்பர், 2021

True
பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க இலங்கையின் கடனில் மறைக்கப்பட்ட ஒரு அம்சத்தை குறிப்பிடுகிறார்
பொதுத்துறைக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 109.7% என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வரலாற்றிலேயே இதுதான் மிக அதிகமானது. பன்னாட்டு முறிகளை அரசாங்கம் குறைமதிப்பிட்டதை நாங்கள் புறக்கணித்தால் இந்தப் பெறுமதி மொ.உ.உற்பத்தியின் 113 சதவீதத்தைத் தாண்டும்.
தினமின | ஜூன் 2, 2021
Posted on: 5 ஆகஸ்ட், 2021

True
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சொகுசு வாகனங்களுக்கான கடன் குறித்து லொஹான் ரத்வத்த தவறாகத் தெரிவிக்கிறார்
இது ஒரு கிரெடிட் லைன் (Credit line)… இந்தக் கிரெடிட் லைனைப் பயன்படுத்தவில்லை என்றால் பயனற்றதாகிவிடும் – இதைப் பயன்படுத்த வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் எங்கள் அரசாங்கம் கடனாளி ஆகாது.
நியூஸ் பெர்ஸ்ட்.lk | ஜூன் 12, 2021
Posted on: 8 ஜூலை, 2021

Blatantly False
சீனாவுக்கான கடன் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார சரியாகக் குறிப்பிடுகிறார்.
இலங்கையின் கடனில் 14% சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது…
தினமின | மே 10, 2021
Posted on: 3 ஜூன், 2021

True
பாராளுமன்ற உறுப்பினர் கப்ரால்: கடன் மீள்கொடுப்பனவு கூற்றில் தவறு இல்லாமல் இல்லை
தற்போது வரையில் (பெப்ரவரி 2021) மொத்த பன்னாட்டு முறிகளின் நிலுவை ஐ.அ.டொலர் 14 பில்லியன், இது இலங்கையின் மொத்தக் கடன் தொகையில் வெறும் 16.7 சதவீதமாகும். இலங்கையின் 83.3% கடன்களைக் கொண்டுள்ள பிற கடன் வழங்குனர்கள் மீள்கொடுப்பனவு ஆற்றல் குறித்து கவலை அல்லது அழுத்தத்தின் எந்த அறிகுறியையும் வெளிக்காட்டவில்
சன்டே ஒப்சேவர் | பிப்ரவரி 28, 2021
Posted on: 26 மார்ச், 2021

Partly True
வெளிநாட்டுப் படுகடன் கொடுப்பனவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் திசாநாயக்க சரியாகத் தெரிவித்துள்ளார்.
மாதாந்தம் சுமாராக 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் [வெளிநாட்டு] கடனை நாங்கள் செலுத்த வேண்டும்.
லங்காதீப | அக்டோபர் 12, 2020
Posted on: 26 நவம்பர், 2020

True
இலங்கை ரூபாயின் கடன்தொகை அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் கவலை சரியானது
…5 ஆண்டுகளில் கடன் தொகை ரூ.5,700 பில்லியனாக அதிகரித்துள்ளதாக (அந்த நாட்களில்) அரசாங்கம் கதறியது, இல்லையா? ஆனால், அவர்களுடைய காலத்தில், வெறும் நான்கு மாதங்களில் கடன் (சுமாராக) ரூ.1,000 பில்லியனால் அதிகரித்துள்ளது... முன்னாள் அரசாங்கத்தின் காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கடனின் மாதாந்த அதிகரிப்பானது 2.5
ஐக்கிய மக்கள் சக்தி ஊடக சந்திப்பு | ஜூலை 7, 2020
Posted on: 2 அக்டோபர், 2020

True
நியூயோர்க் பெடரல் ரிசர்வ் வங்கியிடம் இருந்து இலங்கை கடன் பெற்றுக்கொள்வது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டி சில்வா மிகைப்படுத்துகின்றார்.
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக, இறையாண்மையுடைய நாடாக இலங்கை சர்வதேச சமூகத்திடம் கடன் கேட்ட போது, அவர்கள் பிணையம் கேட்டுள்ளனர்
அருண | ஜூலை 20, 2020
Posted on: 20 ஆகஸ்ட், 2020

Partly True
கடன் சுமை தொடர்பில் உதய கம்மன்பில: புள்ளிவிபரங்கள் சரியானவை, ஆனால் அதன் மூலம் எட்டப்பட்ட முடிவு சரியில்லை
2005 ஆம் ஆண்டில் நாங்கள் நாட்டினைப் பொறுப்பேற்றுக்கொண்ட போது, இலங்கையின் கடன் சுமை 103 சதவீதமாக இருந்தது
மவ்பிம | ஜூலை 8, 2020
Posted on: 23 ஜூலை, 2020

True
ஜப்பானின் கடன் உதவிகள் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரியாகவே தெரிவிக்கின்றார்.
ஒரு நாடாக, ஜப்பான் குறைந்த வட்டி வீதத்தில் அதிக கடன்களை வழங்கியுள்ளது
அருண | ஜூன் 16, 2020
Posted on: 8 ஜூலை, 2020

True
விமான நிறுவனங்களின் கடன் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க மிகைப்படுத்திக் குறிப்பிடுகின்றார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்காவினால் நாட்டிலுள்ள நபர்கள் ஒவ்வொருவரும் 12,500 ரூபாவுக்கு கடனாளியாக்கப்பட்டுள்ளார்கள்.
திவயின | ஆகஸ்ட் 28, 2019
Posted on: 4 பிப்ரவரி, 2020

False
அமைச்சர் எரான் விக்கிரமரத்ன அரசாங்கத்தின் கடன் தொடர்பில் குறிப்பிட்டது இரண்டு வருடங்களுக்கு சரியானது என்ற போதும், நான்கு வருடங்களுக்கு அல்ல.
அரசாங்கம் பெற்றுக்கொண்ட மொத்தக் கடன்களும், கடன்களை மீளச்செலுத்துவதற்காக மாத்திரமே முழுமையாக பயன்படுத்தப்பட்டது.
டெய்லி FT | ஜூன் 19, 2019
Posted on: 22 ஆகஸ்ட், 2019

Partly True
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ கடன் அதிகரிப்பு மற்றும் அதற்கான காரணங்களை தவறாகக் குறிப்பிடுகின்றார்.
2014 டிசம்பர் மாத இறுதியில் காணப்பட்ட மொத்த நிலுவையின் 50 சதவீதத்திற்கு சமமான தொகையினை, கடந்த நான்கு ஆண்டுகளில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் கடனாகப் பெற்றுள்ளது.
தி ஐலன்ட் | ஜனவரி 12, 2019
Posted on: 21 மார்ச், 2019

False