Anura Kumara Dissanayake
தித்வா மீட்புப் பணிகளுக்கான நிதி தொடர்பில் ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார்
(தித்வா சூறாவளிக்குப் பின்னரான மீட்புப் பணிகளுக்காக) நாங்கள் ஒரு சதம் கூட கடனாகப் பெறவில்லை. அதற்காக நாங்கள் பணத்தை அச்சிடவும் இல்லை. எங்கள் திறைசேரி கணக்கில் ரூ.1.2 ட்ரில்லியன் இருந்தது. அதிலிருந்து நாங்கள் இதற்காக ரூ.500 பில்லியனை ஒதுக்கினோம்.
அநுர குமார திசாநாயக்கவின் யூடியுப் பக்கம் | பிப்ரவரி 11, 2026
Posted on: மார்ச் 31, 2026
Partly True
2025 வரவு செலவுத் திட்டத்திலிருந்து 30 பில்லியனைப் பயன்படுத்த முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டது கேள்வியை எழுப்பியுள்ளது
இதேபோன்று, ஒதுக்கீடுகளில், கடந்த வரவு செலவுத்திட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்ட ஒதுக்கீடுகளில் சுமார் ரூ.30 பில்லியன் எங்களிடம் உள்ளது. [அந்த நிதியை] பாராளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் பயன்படுத்த முடியும். அந்த அனைத்து ஒதுக்கீடுகளும் [அனர்த்தத்துடன் தொடர்புடைய பணிகளுக்கு] ஒதுக்கப்பட்டுள்ளன.
Art TV | நவம்பர் 30, 2025
Posted on: பிப்ரவரி 3, 2026
True
ஜனாதிபதி திசாநாயக்க குறிப்பிடும் ஒதுக்கு பெறுமதிகளில் பிரச்சினை உள்ளது
“5-6 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று எமது நாடு பாரிய டொலர் ஒதுக்கைக் கொண்டுள்ளது.”
NPP யூடியூப் சேனல் | ஏப்ரல் 17, 2025
Posted on: ஜூலை 7, 2025
False
அண்மைக் காலங்களில் பெறப்பட்ட பணவனுப்பல்கள் குறித்து ஜனாதிபதி தவறாகத் தெரிவித்துள்ளார்
கடந்த இரண்டு மாதங்களில் வெளிநாட்டு தொழிலாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற பணவனுப்பல்களின் உட்பாய்ச்சலே அண்மைக் காலங்களில் பதிவான மிக அதிகமான தொகையாகும். கடந்த இரண்டு மாதங்களில் [ஐ.அ.டொ] 1,121 மில்லியனை நாங்கள் பெற்றுக்கொண்டுள்ளோம்… […]
பாராளுமன்றத்தில் | மார்ச் 21, 2025
Posted on: மே 20, 2025
False
மொத்தப் பொருளாதார நடவடிக்கையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை தனிநபர் பங்களிப்பிலுள்ள ஏற்றத்தாழ்வாக அநுர குமார திசாநாயக்க தவறாகக் குறிப்பிடுகிறார்
இன்று எமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 36% மேல் மாகாணத்தில் இருந்து கிடைக்கிறது. நாட்டின் தேசிய செல்வத்தில் வட மத்திய மாகாணத்தின் பங்களிப்பு 5% ஆகும். வட மேல் மாகாணத்தின் பங்களிப்பு 9% ஆகும். பொருளாதாரத்தில் மக்களின் பங்களிப்பைப் பொறுத்து அதன் நன்மைகள் மக்களுக்குக் கிடைக்கும்..
அருண | ஜனவரி 26, 2023
Posted on: மார்ச் 2, 2023
Partly True
நுவரெலியாவின் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக அநுர குமார திசாநாயக்க குறிப்பிடும் புள்ளிவிபரங்களில் தடுமாற்றம் காணப்படுகிறது
…நீங்கள் இலங்கை முழுவதையும் கருத்தில் கொண்டால் பிறப்பு நிறைக்குறைவு 12.2% ஆகும். ஆனால் நுவரெலியா மலையகச் சமூகத்தை எடுத்துக்கொண்டால் இது 20% ஆகும். பொதுவாக இலங்கையில் 5 வயதிற்கு உட்பட்ட 7.4 சதவீதமான குழந்தைகள் உடற்தேய்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மலையகச் சமூகங்களைப் பொறுத்தவரை இது 8.2% ஆகும்.
அநுர குமார திஸாநாயக்க | நவம்பர் 8, 2022
Posted on: டிசம்பர் 1, 2022
Partly True