உண்மைச் சரிபார்ப்புகளும்
இந்த ஆண்டில்தான் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஜுன் 23, 2026 அன்று ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் போது, ‘சுத்தமான இலங்கை’ (Clean Sri Lanka) வேலைத்திட்டம் வெற்றியடையவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இக்கூற்றைச் சரிபார்ப்பதற்காக, FactCheck.lk உலக சுகாதார அமைப்பின் (WHO) உலகளாவிய டெங்கு தரவுப்பலகையிலிருந்து (Global Dengue Dashboard) தரவுகளைப் பெற்றுப் பரிசீலித்தது. இத்தரவுப்பலகையானது சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு மற்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு என்பவற்றிடமிருந்து ஒவ்வொரு மாதமும் இலங்கை தொடர்பான உலகளாவிய டெங்கு கண்காணிப்புத் தரவுகளைச் சேகரித்து அறிக்கை செய்கின்றது. ஜனவரி 2017 முதல் ஜுலை 2026 வரையிலான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கையை விளக்கப்படம் 1 காட்டுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் இந்தக் கூற்றைத் தெரிவிப்பதற்கு முன்னர் பதிவான டெங்கு பாதிப்புக்களின் மொத்த எண்ணிக்கை தொடர்பில் கிடைக்கும் சமீபத்திய முழுமையான மாதாந்தத் தரவை (அதாவது, மே மாதத்திற்கான) அடிப்படையாகக் கொண்டு FactCheck.lk முதலில் இந்தக் கூற்றை மதிப்பிட்டது. 2026 மே மாத முடிவில், ஜனவரி மாதம் முதல் 33,872 டெங்கு பாதிப்புகள் இலங்கையில் பதிவாகியுள்ளன. இது முந்தைய இரு ஆண்டுகளின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்: (1) மே 2017 – ஜனவரி 2017 முதல் மொத்தமாக 52,029 டெங்கு நோயாளர்கள்; (2) மே 2023 – மொத்தமாக 38,009 டெங்கு நோயாளர்கள்.
2026 ஜுன் மாதத்தில் (பாராளுமன்ற உறுப்பினர் தனது கூற்றை வெளியிட்ட மாதம்) டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்ததுடன், 2026 ஆம் ஆண்டிற்கான மொத்த எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டின் மொத்த எண்ணிக்கையை விட அதிகரித்தது. எனினும், இது 2017 ஆம் ஆண்டின் எண்ணிக்கையை விட குறைவாகவே இருந்தது. 2026 ஆம் ஆண்டில் 56,422 டெங்கு பாதிப்புகள் பதிவான 2026 ஜூன் மாதத்தில் (பாராளுமன்ற உறுப்பினர் இக்கூற்றைக் கூறிய மாதம்) டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததுடன், 2026 இன் மொத்த எண்ணிக்கை 2023 இன் இதே காலப்பகுதிக்கான மொத்த எண்ணிக்கையை விடக் அதிகமாக இருந்தது. இருப்பினும், இது 2017 ஆம் ஆண்டின் எண்ணிக்கையை விட மிகவும் குறைவாகவே இருந்தது; 2026 இல் 56,422 நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், 2017 இல் இந்நோயாளர்களின் எண்ணிக்கை 77,330 ஆக உயர்ந்திருந்தது (வரைபடம் 1 ஐப் பார்க்கவும்). எனவே, ஜூன் மாதத்தில் பதிவான நோயாளர்களின் திடீர் அதிகரிப்பைக் கணக்கில் எடுத்துக்கொண்ட போதிலும், 2026 ஆம் ஆண்டிலேயே மிக அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்ற பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை நியாயப்படுத்த முடியாது.
எனவே, பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை தவறானது என வகைப்படுத்துகிறோம்.
மேலதிகக் குறிப்பு: டெங்கு கண்காணிப்புத் தரவுகள் உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய டெங்கு தரவுப்பலகையினால் (Dengue Dashboard) மாதாந்தம் சேகரிக்கப்பட்டு, அதற்கு அடுத்த மாதம் வெளியிடப்படுகின்றன. இலங்கையில் டெங்கு கண்காணிப்பானது நாளாந்த மற்றும் வாராந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது. எனவே, உத்தியோகபூர்வ தேசிய புள்ளிவிபரங்களைப் பயன்படுத்தி மாதாந்த தரவுகளுடன் முடிந்தவரை சீரமைத்து இது தொகுக்கப்பட்டிருந்தாலும், தேசிய அளவில் அறிக்கையிடப்பட்ட புள்ளிவிபரங்களுடன் (இவை 2022 ஆம் ஆண்டிற்கு முன்னர் சீராக அறிக்கையிடப்படவில்லை) சிறிய முரண்பாடுகள் இருக்கக்கூடும்.
விளக்கப்படம் 1: மாதாந்தம் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை (ஜனவரி 2017 முதல் ஜுலை 2026 வரை)

மூலம்
மூலம்: உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய டெங்கு தரவுப்பலகை (Global Dengue Dashboard)