கோட்டாபய ராஜபக்ஷ

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ மிகைப்படுத்துகின்றார்.

"

90 சதவீதமான காணிகளை நாங்களே விடுவித்துள்ளோம்.

ஊடக சந்திப்பு | அக்டோபர் 16, 2019

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் 90 வீதமானவை யுத்தம் நிறைவடைந்த பின்னர் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் விடுவிக்கப்பட்டதாக இலங்கை பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூற்றினை சரிபார்ப்பதற்கு நாங்கள் நல்லிணக்க பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகம் வெளியிட்ட தகவல்களை ஆராய்ந்தோம். அத்துடன் அவர் குறிப்பிடும் சதவீதங்களை உறுதிப்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் தகவல்களையும் ஆராய்ந்தோம்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் அரச மற்றும் தனியார் காணிகள் அடங்கும். 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததில் இருந்து 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் காணிகளில் 68 வீதமானவையும், அரச காணிகளில் 24.3 வீதமானவையும் இராணுவத்தினால் விடுவிக்கப்பட்டதாக நல்லிணக்க பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தின் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. (அட்டவணை 1) மொத்தமாக ஆக்கிரமிக்கப்பட்ட 118,253 ஏக்கரில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி 35.2 வீதமானவை விடுவிக்கப்பட்டுள்ளன. கோத்தபாய ராஜபக்ஸ தனியார் காணிகளை மாத்திரம் குறிப்பிடுகின்றார் என்றாலும், உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் அவர் குறிப்பிடுவதை விட மிகவும் குறைவாகும்.

இதனைத் தொடர்ந்து, யாழ் குடாநாட்டில் மாத்திரம் விடுவிக்கப்பட்ட தனியார் காணிகள் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ஸ பின்வருமாறு தெரிவித்துள்ளார். ‘குடாநாட்டை எடுத்துக்கொண்டால் 90 சதவீதத்திற்கும் அதிகமான காணிகள் அதன் சொந்தக்காரர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.’ யாழ் குடாநாட்டுக்கான புள்ளிவிபரங்களை FactCheck இனால் கண்டறிய முடியவில்லை. எனினும், யாழ் மாவட்டத்தில் (73 சதவீதம்) மற்றும் ஒட்டுமொத்தமாக வட மாகாணத்தில் (69 சதவீதம்) காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதை எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது. அவர் குறிப்பிட்ட 90 சதவீதத்தில் இருந்து இது மிகவும் குறைவாகும்.

முன்னைய அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட காணி தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர் ராஜபக்ஷ மிகைப்படுத்திக் குறிப்பிடுகின்றார். எனவே, அவரது கூற்றினை நாங்கள் ‘தவறானது’ என வகைப்படுத்துகின்றோம்.



மூலம்

ஒருங்கிணைப்பு நல்லிணக்க பொறிமுறைகளுக்கான (SCRM) செயலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், ‘நிலம் 2009 – 2019 விடுவிக்கப்பட்டது’ பார்க்: https://www.scrm.gov.lk/infographics?lightbox=dataItem-ju87cpj5 [last accessed: 22 October 2019]

அசல் அறிக்கைக்கு, பார்க்கவும்: https://youtu.be/xpBIDDMYFTE?t=2207 (time stamps – 35:54, 37:36)