தீபாஞ்சலி அபேவர்தன
விளக்கம்: தீபாஞ்சலி வெரிடே ரிசர்ச்சின் ஊடக ஆய்வுக் குழுவின் தலைவராக உள்ளதுடன் FactCheck.lk குழுவின் செயல்பாடுகளை மேற்பார்வையிடுகிறார். ஊடக நெறிமுறைகள், ஊடக நடத்தை மற்றும் ஊடகங்கள் மற்றும் பெண்கள் ஆகியவற்றில் அவருக்கு விரிவான அனுபவம் உள்ளது. அத்துடன், இவர், அவர் நோர்வேயின் ஒஸ்லோ பல்கலைக்கழகம் மற்றும் சுவிட்சர்லாந்தின் ஃப்ரிபர்க் பல்கலைக்கழகத்தில் தனது படிப்புகளின் மூலம் முரண்பாடு- தீர்வு மற்றும் மனித உரிமைகள் போன்றவற்றில் அனுபவம் பெற்றவர். தீபாஞ்சலி கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் கலைமாணி (BA) பட்டமும், இந்தியாவின் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தெற்காசியக் கற்கைகளில் முதுகலைமாணி (MA) பட்டமும் பெற்றார். இவர், அங்கு மதன்ஜீத் சிங் புலமைப்பரிசில் முதுகலைமாணி படிப்பை மேற்கொண்ட முதல் இரண்டு இலங்கையர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தீபாஞ்சலி, இலங்கை ஊடகங்கள், ஊடக உரிமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதில், ஊடகங்களின் பங்கு ஆகியவற்றைப் புரிந்துகொள்வதில் பரந்த அளவிலான உள்ளூர் மற்றும் சர்வதேச பங்குதாரர்கள் மற்றும் ஊடக பயிற்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.