Dr. Nandalal Weerasinghe

2027 இல் மீண்டுவருவோம் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிடுகின்றார்

"

பொதுவாக, எந்தவொரு பொருளாதார நெருக்கடிக்குப் பின்னரும் அந்தக் குறிப்பிட்ட நாட்டில் உற்பத்தி இழப்பு ஏற்படும் எனக் கூறப்படுகின்றது. அந்த இழப்பைச் சரிசெய்து இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குக் குறிப்பிட்ட காலம் தேவைப்படும். அந்த 2018 நிலையை நாங்கள் அடுத்த வருடமோ அல்லது அதிகபட்சமாக அதற்கு அடுத்த வருடமோ அட

இலங்கை மத்திய வங்கி யூடியூப் பக்கம் | மார்ச் 26, 2025

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் தேசிய உற்பத்தி வழக்கமாகக் குறையும் என்றாலும், நெருக்கடிக்கு முன்னரான உச்சத்தை (2018 நிலை) இலங்கை “அடுத்த வருடம் அல்லது அதிகபட்சமாக அதற்கு அடுத்த வருடம்” எட்டும் என நாணயக் கொள்கை தொடர்பான ஊடக சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போது இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தக் கூற்றைச் சரிபார்க்க, சர்வதேச நாணய நிதியத்தின் உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத் தரவுதளம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது மீளாய்வு (மார்ச் 2025) ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.

ஆளுநருடைய அறிக்கை இரண்டு கூற்றுக்களைக் கொண்டது: (i) நெருக்கடிக்கு பின்னர் ஒரு நாடு வழக்கமாக உற்பத்தி இழப்பை எதிர்கொள்வதுடன் அதிலிருந்து மீண்டு வருவதற்கு கால அவகாசம் தேவை, (ii) இலங்கை அதன் 2018 உற்பத்தி மட்டத்தை 2026 இல் அல்லது அதிகபட்சமாக 2027 இல் எட்டும்.

நெருக்கடிக்குப் பின்னர் நாடுகள் பொதுவாக உற்பத்தி இழப்பை எதிர்கொள்கின்றனவா?

கடந்த பத்து ஆண்டுகளில் 12 நாடுகளில் 15 நாட்டிற்கான கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளில் நான்கில் எந்தவித உற்பத்தி இழப்பும் ஏற்படவில்லை (மொ.உ.உ சுருக்கம்). ஆனால் மீதமுள்ள 11 நடவடிக்கைகளில் கடன் இடைநிறுத்தப்பட்ட ஆண்டிலோ அல்லது அதனைத் தொடர்ந்து வந்த ஆண்டிலோ மொத்த உள்நாட்டு உற்பத்தி சுருங்கியுள்ளது. இவற்றில் சுரிநாம் மற்றும் உக்ரைன் ஆகிய இரண்டு நாடுகள் அவற்றின் நெருக்கடிக்கு முன்னரான உற்பத்தி நிலைகளுக்கு இன்னும் திரும்பவில்லை. நெருக்கடிக்கு முன்னரான உற்பத்தி மட்டம் என்பது கடன் இடைநிறுத்தப்படுவதற்கு முன்னரான ஐந்தாண்டுகளில் பதிவான அதிகூடிய உண்மையான மொ.உ.உற்பத்தி என வரையறுக்கப்படுகின்றது.

13 கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின், ஒன்றுசேர்ந்த மொ.உ.உ சுருக்கம் மற்றும் நெருக்கடிக்கு முன்னரான உற்பத்தி மட்டங்களை மீண்டும் எட்டுவதற்கு எடுக்கப்பட்ட காலங்களை அட்டவணை 1 காட்டுகின்றது (நெருக்கடிக்கு முன்னரான உற்பத்தி மட்டங்களை இன்னும் எட்டாத இரண்டு நாடுகளும் இதிலிருந்து விலக்கப்பட்டுள்ளன).

இந்த ஆதாரம் ஆளுநரின் முதலாவது கூற்றை ஆதரிக்கின்றது: கடன் மீள்கொடுப்பனவை இடைநிறுத்தும் நெருக்கடிக்குத் தள்ளப்படும் பெரும்பாலான பொருளாதாரங்கள் ஆரம்பத்தில் அதன் முந்தைய மட்டங்களுடன் ஒப்பிடும்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி சுருக்கத்தால் பாதிக்கப்படுகின்றன.

இலங்கை அதன் 2018 உற்பத்தியை குறைந்த பட்சம் 2026/2027 இல் எட்டுமா?

நெருக்கடிக்கு முன்னரான மொ.உ.உ மட்டங்களுக்கு மீண்டும் திரும்பிய ஒன்பது கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஆறின் மீட்சி மூன்று ஆண்டுகளுக்குள் எட்டப்பட்டது. ஏனைய மூன்றும் ஆறு ஆண்டுகளுக்குள் எட்டப்பட்டது (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்).

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் சமீபத்திய வளர்ச்சி கணிப்புகளை FactCheck.lk பயன்படுத்தி கணக்கிட்டது. இது 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கு உண்மையான மொ.உ.உற்பத்தியின் வளர்ச்சியை 3% என மதிப்பிட்டுள்ளது. இந்தக் கணிப்பின் பிரகாரம், இலங்கையின் உண்மையான மொ.உ.உ அதன் 2018 நெருக்கடிக்கு முன்னரான உற்பத்தி மட்டத்தை 2027 ஆம் ஆண்டில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது நெருக்கடி ஏற்பட்டு ஐந்து ஆண்டுகளின் பின்னராகும் (அட்டவணை 2 ஐப் பார்க்கவும்). எனவே ஆளுநர் குறிப்பிடும் 2026/2027 என்னும் மீட்சிக் காலம் சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்புகளுடன் பொருந்துகின்றது. எனினும் இந்தக் கால அளவு அண்மையில் கடன் மறுசீரமைப்பில் ஈடுபட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் பழைய நிலைக்குத் திரும்புவதற்கு அதிக காலத்தை எடுக்கும் இரண்டாவது மெதுவான நாடாக இலங்கையை மாற்றும். இலங்கையை விட ஆர்ஜென்டினா மட்டுமே அதிக காலத்தை எடுக்கின்றது.

கடன் நெருக்கடிக்குப் பின்னர் உற்பத்தி இழப்பு ஏற்படுவது பொதுவானது என்பதையும் இலங்கை 2027 ஆம் ஆண்டளவில் அதன் 2018 நிலையை எட்டும் என்பதையும் ஆளுநர் சரியாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஆளுநருடைய அறிக்கையை நாங்கள் சரியானது என வகைப்படுத்துகின்றோம்.

 

 

அட்டவணை 1: நெருக்கடிக்கு முன்னரான அதிகபட்ச உண்மையான உற்பத்தியை எட்டுவதற்கு எடுத்த காலம்*

*குறிப்பு: நெருக்கடிக்கு முன்னரான அதிகபட்சம் என்பது நெருக்கடிக்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் பெறப்பட்ட அதிகபட்ச உண்மையான மொ.உ.உற்பத்தி என வரையறுக்கப்படுகின்றது.

அட்டவணை 2: IMF கணிப்பின் அடிப்படையில் எதிர்பார்க்கப்படும் உண்மையான மொ.உ.உ (மார்ச் 2025) – பெறுமதிகள் ரூ. ட்ரில்லியனில்



மூலம்

நெருக்கடிக்கு முன்னரான அதிகபட்சம் என்பது நெருக்கடிக்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் பெறப்பட்ட அதிகபட்ச உண்மையான மொ.உ.உற்பத்தி என வரையறுக்கப்படுகின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன