Claim

பந்துல குணவர்த்தன
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
வெளிநாடுகளில் இருந்து வருடாந்தம் கடன்களை எவ்வித வரம்புகளும் இன்றி பெற்றுக்கொள்வதற்கு இந்த அரசாங்கம் சட்டம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. செயற்திறனுடைய பொறுப்பு முகாமைத்துவ சட்டம் என தவறாகப் பெயரிடப்பட்டு இது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால், வரவு செலவுத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு அவர்கள் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் கடனாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
மவ்பிம: 4 Aug 2019
Statement
வெளிநாடுகளில் இருந்து வருடாந்தம் கடன்களை எவ்வித வரம்புகளும் இன்றி பெற்றுக்கொள்வதற்கு இந்த அரசாங்கம் சட்டம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. செயற்திறனுடைய பொறுப்பு முகாமைத்துவ சட்டம் என தவறாகப் பெயரிடப்பட்டு இது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால், வரவு செலவுத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு அவர்கள் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் கடனாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
Fact check
கடன்பெறுவதற்கான வரம்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தவறாகத் தெரிவித்துள்ளார்.
மேலேயுள்ள கூற்றில் செயற்திறனுடைய பொறுப்பு முகாமைத்துவ சட்டத்தை நிறைவேற்றியுள்ளதன் மூலம், அரசாங்கம் பின்வரும் விடயங்களை முன்னெடுக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகின்றார்.
1. ஆண்டு வரம்பு இன்றி வெளிநாட்டுக் கடன்களை பெற்றுக்கொள்ள முடியும்.
2. வரவு செலவுத்திட்டத்திற்கு (விதிகளுக்கு) அப்பாற்பட்டு எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம்.
செயற்திறனுடைய பொறுப்பு முகாமைத்துவ சட்டத்திற்கு அமைவாக, ஒதுக்கீட்டுச் சட்டத்தில் (வரவுசெலவுத்திட்டம்) வெளிப்படையாக குறிப்பிடப்பட்ட தொகையை விட கூடுதல் கடன்களை பெறுவதன் மூலம் பொதுப்படுகடன்களை அரசாங்கத்தினால் மறுநிதியளிப்பு அல்லது முன்கூட்டியே நிதியளிக்க முடியும். எனினும், முந்தைய நிதி ஆண்டின் இறுதியில் நிலுவையில் உள்ள மொத்த கடன்தொகையின் 10 வீதத்தை மாத்திரமே கடனாகப் பெற்றுக்கொள்ள முடியும் என ஆண்டு வரம்பினை இந்த சட்டம் நிர்ணயித்துள்ளது (பிரிவு 3). இந்த விதியின் கீழ் பெற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து மேலதிக கடன்களும் வெளிநாட்டு கடன்களாக (வெளி மூலங்களில் இருந்து) இருந்தாலும் இந்த வரம்புக்கு உட்பட்டது என்பது இதன் அர்த்தமாகும். எனவே, பாராளுமன்ற உறுப்பினரின் இரண்டு கூற்றுக்களும் தவறாக உள்ளன.
நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றினை 'தவறானது' என வகைப்படுத்துகின்றோம்.
*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.
Sources
செயற்திறனுடைய பொறுப்பு முகாமைத்துவ சட்டம், 2018 ஆம் ஆண்டின் இல. 08, பார்வையிட: https://srilankalaw.lk/gazette/2018_pdf/08-2018_E.pdf [last accessed 20 September 2019]