• මුල් පිටුව
  • අප ගැන
    • අපි කවුරුන්ද?
    • අපගේ ක්‍රියාවලිය
    • අප කණ්ඩායම
  • ඇගයුම් ක්‍රියාවලිය
    • අපගේ ශ්‍රේණිගත කිරීම්
    • නිවැරදි කිරීම් පිළිබඳ ප්‍රතිපත්තිය
  • බ්ලොග් සටහන්
  • පෙර විශ්ලේෂණ
  • සම්බන්ධ වන්න
  • E සි த

Claim

அலி சப்ரி

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

ஈஸ்டர் தாக்குதல்களில், அப்போதைய பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) தவறு செய்யாதிருந்திருக்கலாம். இருப்பினும், ஜனாதிபதி அவரை நீக்க விரும்பினால், இந்த அரசியலமைப்பின் கீழ் அவரால் அவ்வாறு செய்ய முடியாது.

லங்காதீப: 16 Aug 2020

False

Statement

ஈஸ்டர் தாக்குதல்களில், அப்போதைய பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) தவறு செய்யாதிருந்திருக்கலாம். இருப்பினும், ஜனாதிபதி அவரை நீக்க விரும்பினால், இந்த அரசியலமைப்பின் கீழ் அவரால் அவ்வாறு செய்ய முடியாது.

Fact check

நீதி அமைச்சர் அலி சப்ரி: 19 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பாதுகாப்புக்களை பலவீனங்களாக தவறாகச் சித்தரிக்கின்றார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு தனது எதிர்ப்பினை விளக்கும் வகையில் அமைச்சர் சப்ரி இந்தக் கூற்றினைத் தெரிவித்துள்ளார். இந்த கூற்றின் மூலமாக பொலிஸ் மா அதிபரை பொறுப்பில் இருந்து நீக்குவதற்கான அழுத்தம் ஜனாதிபதிக்கு 19 ஆவது திருத்தச் சட்டத்தினால் ஏற்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்துகின்றார்.

பொலிஸ் மா அதிபரை நீக்குவதில் ஜனாதிபதியின் அதிகாரத்தில் 19 ஆவது திருத்தச் சட்டம் ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதா என்பதை மதிப்பிடுவதற்கு, 2015 ஆம் ஆண்டில் 19 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னரும், பின்னரும் அரசியலமைப்பு மற்றும் சட்ட நிலைப்பாடுகளை FactCheck ஆராய்ந்தது. 19 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட அரசியலமைப்பின் உறுப்புரை 41c(3), அரசியலமைப்பு அல்லது சட்டத்தினால் அன்றி பொலிஸ் மா அதிபரை நீக்க முடியாது எனக் குறிப்பிடுகின்றது. பொலிஸ் மா அதிபரை நீக்குவதற்கு பூர்த்தி செய்ய வேண்டிய தேவைப்பாடுகள் 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு முன்னரும், பின்னரும் அரசியலமைப்பின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

பொலிஸ் மா அதிபரை நீக்குவதற்கான பொருத்தமான தேவைப்பாடுகள் அரசியலமைப்பினால் அன்றி சட்டத்தினாலேயே வழங்கப்பட்டுள்ளது. அதாவது 2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இல. அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டம், இது 19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு 13 ஆண்டுகளுக்கு முன்னரே நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்த சட்டத்தின் கீழ், பொலிஸ் மா அதிபரை கீழ்வரும் சந்தர்ப்பங்களில் நீக்குவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது:

அ) சில குற்றங்களுக்கு தண்டனை பெறுதல் அல்லது கடனிறுக்கவகையற்றவர் என அறிவிக்கப்படுதல்,

ஆ) சுகவீனம் காரணமாக தகுதியிழத்தல்,

இ) குடியுரிமையை இழத்தல், அல்லது

ஈ) இலஞ்சம், அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்துதல், கடமையை அலட்சியப்படுத்துதல், அல்லது பதவியில் பக்கச்சார்பாக செயற்படுதல்.

முதல் மூன்று காரணங்களில், ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகள் எந்தவித விசாரணையும் இன்றி பொலிஸ் மா அதிபரை நீக்குவதற்கு ஜனாதிபதிக்கு அனுமதியளிக்கின்றது. எனினும், பொலிஸ் மா அதிபரை நீக்குவதற்கு காரணம் (ஈ) அடிப்படையாக இருந்தால், பொலிஸ் மா அதிபருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு விசாரணைக் குழுவை அமைக்குமாறு குறைந்தது 75 பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் தீர்மானம் ஒன்றை வழங்கி கோரிக்கை விடுக்க வேண்டும். இந்த விசாரணைக் குழு பொலிஸ் மா அதிபர் குற்றமிழைத்தவர் எனக் கண்டறிந்தால், பொலிஸ் மா அதிபரை நீக்குவதற்கு சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பார். பிரேரணைக்கு ஆதரவாக பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தால், பொலிஸ் மா அதிபரை பொறுப்பிலிருந்து ஜனாதிபதி நீக்க வேண்டும்.

இந்த உண்மைகள் பொலிஸ் மா அதிபரை நீக்குவதற்கு ஜனாதிபதி பூர்த்திசெய்ய வேண்டிய தேவைப்பாடுகள் 19 ஆவது திருத்தச் சட்டத்தினால் அறிமுகப்படுத்தப்படவில்லை, ஆனால் 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு முன்னரே 2002 ஆம் ஆண்டில் பாராளுமன்ற சட்டத்தினால் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றது.

எனவே, அமைச்சர் சப்ரியின் கூற்றினை ‘தவறானது’ என நாங்கள் வகைப்படுத்துகின்றோம்.

*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.

Sources

2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இல. அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டம், https://www.srilankalaw.lk/YearWisePdf/2002/REMOVAL_OF_OFFICERS_(PROCEDURE)_ACT,_No._5_OF_2002.pdf  (accessed on 07 September 2020).

இலங்கை அரசியலமைப்பு, 1978 (திருத்தங்கள் அற்றது), http://www.parliament.lk/files/pdf/constitution/1978ConstitutionWithoutAmendments.pdf (accessed on 07 September 2020).

இலங்கை அரசியலமைப்பு (17 ஆவது திருத்தம் வரையிலானது), https://www.parliament.lk/files/pdf/constitution/constitution-upto-17th.pdf (accessed on 07 September 2020).

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தம், https://www.parliament.lk/files/pdf/constitution/18th_amendment_act.pdf (accessed on 07 September 2020).

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம், https://www.parliament.lk/files/pdf/constitution/19th-amendment-act.pdf (accessed on 07 September 2020).


Right of Reply

Leave a Comment.

0 Comments

විශේෂාංග ලිපි

  • වඩාත් කියවා ඇති ලිපි
  • නවතම ලිපි

FactCheck.lk පිළිබඳව ගම්මන්පිල මහතා දැක්වූ ප්‍රතිචාරය සම්බන්ධයෙන් අපි කණගාටු වෙමු

18 May 2020

Read More

FactCheck.lk විශ්ලේෂණ වෙත ප්‍රතිචාර නොදක්වයි, FactCheck.lk වෙත ප්‍රසිද්ධියේ විවේචන එල්ල කරයි

30 May 2020

Read More

FactCheck.lk expresses its disappointment with former MP Udaya Gammanpila’s statement

26 May 2020

Read More

திரு உதய கம்மன்பிலவின் அறிக்கை குறித்து FactCheck.lk தனது அதிருப்தியை தெரிவித்துக் கொள்கின்றது.

26 May 2020

Read More

Gammanpila does not respond to the analyses done by FactCheck.lk but criticises FactCheck.lk publicly

04 June 2020

Read More

FactCheck.lk முன்னெடுத்த மதிப்பீடு குறித்து கம்மன்பில எந்தவித பதிலும் அளிக்காத போதும், FactCheck.lk குறித்து பொதுவெளியில் விமர்சிக்கின்றார்.

10 June 2020

Read More

Budget Check 2021

01 December 2020

Read More

Budget Check 2021

01 December 2020

Read More

FactCheck.lk முன்னெடுத்த மதிப்பீடு குறித்து கம்மன்பில எந்தவித பதிலும் அளிக்காத போதும், FactCheck.lk குறித்து பொதுவெளியில் விமர்சிக்கின்றார்.

10 June 2020

Read More

Gammanpila does not respond to the analyses done by FactCheck.lk but criticises FactCheck.lk publicly

04 June 2020

Read More

FactCheck.lk විශ්ලේෂණ වෙත ප්‍රතිචාර නොදක්වයි, FactCheck.lk වෙත ප්‍රසිද්ධියේ විවේචන එල්ල කරයි

30 May 2020

Read More

FactCheck.lk expresses its disappointment with former MP Udaya Gammanpila’s statement

26 May 2020

Read More

திரு உதய கம்மன்பிலவின் அறிக்கை குறித்து FactCheck.lk தனது அதிருப்தியை தெரிவித்துக் கொள்கின்றது.

26 May 2020

Read More

FactCheck.lk පිළිබඳව ගම්මන්පිල මහතා දැක්වූ ප්‍රතිචාරය සම්බන්ධයෙන් අපි කණගාටු වෙමු

18 May 2020

Read More
අපි මීළඟට සොයා බැලිය යුත්තේ කුමන ප්‍රකාශයද?

Harin Fernando

The highest amount of debt repayment has to be done in 2021 and in 2022

Mahinda Rajapaksa

“The debt crisis created in this country by the Yahapalana Government has now reached a critical sta...

ඡන්දය ලබා දෙන්න

ප්‍රකාශය ඉදිරිපත් කරන්න

නිර්නාමිකව ඉදිරිපත් කරන්න
Hover Text
වැඩිදුර කියවන්න

පුවත් නිවේදන ලබාගැනීමට ලියාපදිංචි වන්න

අපගේ නවතම පුවත් පිළිබඳ සතිපතා නිවේදන ඔබේ විද්‍යුත් තැපෑල වෙත ගෙන්වා ගන්න.

Copyright © 2020

Web Design & Development by SABERION